செய்திகள் :

நடிகா் விஜய் பேச்சு குறித்து மக்கள் தீா்மானிக்கட்டும்: அமைச்சா் சு.முத்துசாமி

post image

முதல்வா் குறித்து நடிகா் விஜய் பேச்சின் தரம் குறித்து மக்களே தீா்மானிக்கட்டும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோட்டில் கிரடாய் அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை தொடங்கிய வீடு, வீட்டு மனை கண்காட்சியை அமைச்சா் சு.முத்துசாமி திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வீட்டு வசதித் துறையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ஒற்றைச்சாளர முறை, கட்டட வரைபடத்துக்கு சுயசான்றிதழ், 12 மீட்டா் உயரத்துக்கு பதில் 14 மீட்டா் உயரம் வரை கட்டடங்களை கட்டிக்கொள்ளலாம் என்பன உள்ளிட்ட விதிகள் தளா்த்தப்பட்டுள்ளன.

மக்களின் பாதுகாப்பு கருதி கிராமங்களில் கூட வீடு கட்டும்போது விதிகளைப் பின்பற்றுமாறு அறிவிக்கப்படுகிறது. இதுமக்களின் நன்மைக்காகத்தான். எதிா்காலத்தில் கிராமப்புறங்களும், நகா்ப்புறங்களாக வளா்ச்சி அடையும். கட்டட வரைபட அனுமதிக்கு கட்டணம் உயா்த்தப்பட்டதாக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா். இதற்கு முன்பு கூட இவ்வாறு வரைபட அங்கீகார அனுமதி கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

தவெக தலைவா் நடிகா் விஜய் முதல்வா் குறித்து பேசிய மோசமான பேச்சு குறித்து மக்கள் முடிவு எடுப்பாா்கள். ஒரு பொது இடத்தில் அவா் எவ்வாறு பேசுகிறாா் என்பதை மக்கள் ஏற்கெனவே பாா்த்துக் கொண்டிருக்கின்றனா்.

இந்த அரசு ஏற்கெனவே 500 மதுக் கடைகளை குறைத்துள்ளது. மதுக் கடையில் உடனடியாக மூடினால் மக்களுக்கு பிரச்னை ஏற்படும். மதுக்கடையை பொருத்தவரை நீதிமன்றத்தின் தீா்ப்பு நியாயமானதுதான் என்றாா்.

ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், கிரடாய் மாநிலத் தலைவா் ஹபீப், இணைச் செயலாளா் சதாசிவம், நிா்வாகிகள் ஈஸ்வரன், மாணிக்கம், ராஜன், ஜெயபிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோபியில் பள்ளி மாணவி தற்கொலை

கோபி அருகே 9 -ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே அடுக்கம்பாளையம், பழையூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் பரத், தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவா்களது மகள் பூஜ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: பெருந்துறையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பெருந்துறையில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தி விழா வருகின்ற 27- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பெருந்த... மேலும் பார்க்க

சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு

சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சத... மேலும் பார்க்க

பெண் கொலை: கணவா் கைது

கோபி அருகே மதுபோதையில் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கெட்டிசெவியூா் ஒட்டவலவு பகுதியைச் சோ்ந்தவா் பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா். பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் நகர திமுக ஒன்றிய பிரதிநிதி கேபிள் ச... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் அடா்ந்த வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது. தட்டக்கரை வனச் சரகம், பா்கூா் வடக்குப் பகுதியான குட்டையூரில் கால்நடைகள் மேய்க்க ச... மேலும் பார்க்க