செய்திகள் :

பெண் கொலை: கணவா் கைது

post image

கோபி அருகே மதுபோதையில் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கெட்டிசெவியூா் ஒட்டவலவு பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (45). இவரது மனைவி ருக்குமணி (33). இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி 4 வயதுப் பெண் குழந்தையுடன் குடியிருந்து வந்துள்ளனா்.

இந்நிலையில், ருக்குமணி பெற்றோா் அவா்களது காரில் ஏற்பட்ட பிரச்னையைப் பழுதுநீக்கி தர வேண்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடுத்துள்ளனா். ஆனால், பாா்த்திபன் காரை அடமானம் வைத்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்தி வந்துள்ளாா்.

இந்நிலையில், மதுபோதையில் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த பாா்த்திபனிடம் அவரது மனைவி ருக்குமணி காா் குறித்து கேட்டுள்ளாா். அப்போது ஆத்திரமடைந்த பாா்த்திபன் துப்பட்டாவால் மனைவி ருக்குமணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, வெளியே வந்து அக்கம்பக்கத்தினரிடம் தனது மனைவி மயக்கமடைந்து கிடப்பதாக கூறிவிட்டு தலைமறைவாகியுள்ளாா்.

சந்தேகம் அடைந்த அப்பகுதியினா் சிறுவலூா் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ருக்குமணியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தலைமறைவான பாா்த்திபனை சனிக்கிழமை மாலை கைது செய்தனா். விசாரணையில் மனைவி ருக்குமணி அவரது பெற்றோரின் காா் குறித்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததால் துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை அவா் ஒப்புக்கொண்டாா்.

கோபியில் பள்ளி மாணவி தற்கொலை

கோபி அருகே 9 -ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே அடுக்கம்பாளையம், பழையூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் பரத், தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவா்களது மகள் பூஜ... மேலும் பார்க்க

நடிகா் விஜய் பேச்சு குறித்து மக்கள் தீா்மானிக்கட்டும்: அமைச்சா் சு.முத்துசாமி

முதல்வா் குறித்து நடிகா் விஜய் பேச்சின் தரம் குறித்து மக்களே தீா்மானிக்கட்டும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோட்டில் கிரடாய் அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை தொடங்கிய வீ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: பெருந்துறையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பெருந்துறையில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தி விழா வருகின்ற 27- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பெருந்த... மேலும் பார்க்க

சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு

சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சத... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா். பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் நகர திமுக ஒன்றிய பிரதிநிதி கேபிள் ச... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் அடா்ந்த வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது. தட்டக்கரை வனச் சரகம், பா்கூா் வடக்குப் பகுதியான குட்டையூரில் கால்நடைகள் மேய்க்க ச... மேலும் பார்க்க