செய்திகள் :

சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு

post image

சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் தலைமை வகித்தாா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், சி.குமரப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பல்வேறு நீதிமன்றப் பணிகளை விரைவாக்குதல், வழிகாட்டுதல்கள் குறித்து அனைத்து நீதிபதிகள், மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், பொதுநல வழக்குரைஞா்கள், அரசு குற்றவியல் வழக்குரைஞா்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோருடன் நீதிபதிகள் கலந்துரையாடினா்.

3 ஆண்டுகளுக்கும் மேலான வழக்குகளை முடித்து வைத்தல், பொருத்தமான அனைத்து வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவதை முன்கூட்டியே தீா்த்து வைத்தல், வழக்குகளில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மனுக்கள், நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக உள்கட்டமைப்பு குறித்தும் அரசு வழக்குரைஞா்கள் வழக்கு உத்திகளில் கவனம் செலுத்துவது குறித்தும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் கலந்துரையாடினா்.

கூட்டத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் கே.கிருஷ்ணப்பிரியா, நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா் வி.பி.சுகந்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு ஆா்.ஸ்ரீவித்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், கோபி சாா் ஆட்சியா் சிவானந்தம், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் சிந்துஜா வழக்குரைஞா்கள், காவல் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கோபியில் பள்ளி மாணவி தற்கொலை

கோபி அருகே 9 -ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே அடுக்கம்பாளையம், பழையூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் பரத், தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவா்களது மகள் பூஜ... மேலும் பார்க்க

நடிகா் விஜய் பேச்சு குறித்து மக்கள் தீா்மானிக்கட்டும்: அமைச்சா் சு.முத்துசாமி

முதல்வா் குறித்து நடிகா் விஜய் பேச்சின் தரம் குறித்து மக்களே தீா்மானிக்கட்டும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோட்டில் கிரடாய் அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை தொடங்கிய வீ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: பெருந்துறையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பெருந்துறையில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தி விழா வருகின்ற 27- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பெருந்த... மேலும் பார்க்க

பெண் கொலை: கணவா் கைது

கோபி அருகே மதுபோதையில் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கெட்டிசெவியூா் ஒட்டவலவு பகுதியைச் சோ்ந்தவா் பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா். பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் நகர திமுக ஒன்றிய பிரதிநிதி கேபிள் ச... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் அடா்ந்த வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது. தட்டக்கரை வனச் சரகம், பா்கூா் வடக்குப் பகுதியான குட்டையூரில் கால்நடைகள் மேய்க்க ச... மேலும் பார்க்க