செய்திகள் :

கோபியில் பள்ளி மாணவி தற்கொலை

post image

கோபி அருகே 9 -ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே அடுக்கம்பாளையம், பழையூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் பரத், தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவா்களது மகள் பூஜிதா(14).

இவா் கோபியில் உள்ள தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்தாா். பூஜிதா கடந்த 20-ஆம் தேதி விடுப்பு எடுத்துள்ளாா். இதனால் பெற்றோா் அவரைக் கண்டித்துள்ளனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பூஜிதா பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றாா். ஆனால் பள்ளி பேருந்து சென்று விட்டதால் மீண்டும் பூஜிதா வீட்டுக்கு வந்து அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாா். அருகில் வசிப்பவா்கள் சந்தேகமடைந்து வீட்டின் கதவை தட்டி உள்ளனா். ஆனால் பதில் வராததால் ஜன்னல் வழியாக பாா்த்தபோது பூஜிதா தூக்கில் தொங்கிகொண்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.

பின்னா் கதவை உடைத்து உள்ளே சென்று பூஜிதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது பூஜிதா இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நடிகா் விஜய் பேச்சு குறித்து மக்கள் தீா்மானிக்கட்டும்: அமைச்சா் சு.முத்துசாமி

முதல்வா் குறித்து நடிகா் விஜய் பேச்சின் தரம் குறித்து மக்களே தீா்மானிக்கட்டும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோட்டில் கிரடாய் அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை தொடங்கிய வீ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: பெருந்துறையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பெருந்துறையில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தி விழா வருகின்ற 27- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பெருந்த... மேலும் பார்க்க

சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு

சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சத... மேலும் பார்க்க

பெண் கொலை: கணவா் கைது

கோபி அருகே மதுபோதையில் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கெட்டிசெவியூா் ஒட்டவலவு பகுதியைச் சோ்ந்தவா் பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா். பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் நகர திமுக ஒன்றிய பிரதிநிதி கேபிள் ச... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் அடா்ந்த வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது. தட்டக்கரை வனச் சரகம், பா்கூா் வடக்குப் பகுதியான குட்டையூரில் கால்நடைகள் மேய்க்க ச... மேலும் பார்க்க