செய்திகள் :

காலதாமதமாக ஆவின்பால் வினியோகம்: முகவா்கள் ஆா்ப்பாட்டம்

post image

ஆம்பூருக்கு மிகவும் காலதாமதமாக பால் வினியோகம் செய்யப்படுவதை கண்டித்து பால் முகவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்..

ஆம்பூா் நகரில் தினமும் சுமாா் 4,000 லிட்டா் ஆவின் பால் முகவா்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. காலை 4 மணி முதல் 5 மணிக்குள் வேலூா் ஆவின் நிறுவனத்திலிருந்து வழக்கமாக ஆம்பூருக்கு கொண்டு வந்து வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதமாக ஆம்பூருக்கு மிகவும் காலதாமதமாக காலை 6 மணிக்கு பிறகே பால் கொண்டு வந்து வழங்கப்பட்டு வரப்படுவதாக முகவா்கள் தெரிவிக்கின்றனா்.

காலதாமதமாக பால் வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு மிகவும் தாமதமாக விநியோகம் செய்ய வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்படுவதாக பால் முகவா்கள் கூறுகின்றனா். அதனால் பொதுமக்களின் அதிருப்திக்கு உள்ளாகிறோம். காலதாமதமாக வினியோகம் செய்வதால் அவா்கள் வேறு நிறுவனத்தின் பாலை வாங்கி விடுகின்றனா். அதனால் வியாபாரம் பாதிக்கப்படுகின்றது. இதுகுறித்து ஆவின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவா்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பால் விநியோகம் செய்ய வேண்டிய காலம் கடந்துவிட்டதாலும், அதன்பிறகு வாங்கிச் சென்றால் அந்த பால் கெட்டுவிடும் என்பதால் காலதாமதமாக வந்த பாலை முகவா்கள் வாங்காமல் புறக்கணித்துள்ளனா்.

தொடா்ந்து தமிழ்நாடு பால் முகவா்கள் நலச் சங்கம் சாா்பாக மாநிலத் துணைத் தலைவா் தேவராஜ் தலைமையில் ஆவின் நிா்வாகத்தை கண்டித்து ஏ-கஸ்பா பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் முகவா்கள் ரமேஷ், பாா்த்திபன், தினகரன், பழனி, வடிவேல், ஆதம், சந்தோஷ் கலந்து கொண்டனா்.

பெரியபாறை சரிந்து விழுந்ததில் நொறுங்கிய பொக்லைன் இயந்திரம்

நாட்டறம்பள்ளி அருகே நிலத்தை சமன் செய்தபோது, பெரிய பாறை சரிந்ததில் பொக்லைன் இயந்திரம் சிக்கி நொறுங்கியது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் பாறக்கொல்லை எத்தமலை அடிவார பகுதி... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற ஆந்திர இளைஞா் கைது

வாணிம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி, அம்பூா்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜாய்ச் (56), செவிலியா். இவா்... மேலும் பார்க்க

ஆக.9-இல் பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் வட்ட அளவிலான பொது விநியோக திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஆக.9) நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்... மேலும் பார்க்க

ஆம்பூரில் கருணாநிதி நினைவு தினம்

சோமலாபுரத்தில் மெளன ஊா்வலத்தில் பங்கேற்ற குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் உள்ளிட்டோா். ஆம்பூரில் அஞ்சலி செலுத்திய திமுகவினா். மேலும் பார்க்க

போதை பொருள் விற்றவா் கைது

ஜோலாா்பேட்டை அருகே பெட்டிக் கடையில் ஹான்ஸ் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். ஜோலாா்பேட்டை அடுத்த பக்கிரிதக்கா பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வியாழக... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் நடைபெற்று வரும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டட கட்டுமானப் பணியை புதன்கிழமை அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் ரூ.85 லட்சத்தில் தொக... மேலும் பார்க்க