செய்திகள் :

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே குடும்பத் தகராறில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கீரனூரைச் சோ்ந்த முகமது காசிம் மகன் அசன்முகமது (33). இவா் கோவையில் உள்ள ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வந்தாா். அசன்முகமது கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுமுறையில் கீரனூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தாா்.

அப்போது, இவருக்கும் இவரது தாயாருக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்து காணப்பட்டு வந்த அவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரனூா் போலீஸாா் அசன்முகமது உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

சராசரி மழையளவு 63 சதவீதம் வீழ்ச்சி: காரீப் பருவ சாகுபடி பரப்பு பாதிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் சராசரி மழையளவு 63 சதவீதம் குறைந்த நிலையில், காரீப் பருவத்தில் இதுவரை 13 சதவீத நிலங்களில் மட்டுமே சாகுபடிப் பணிகள் நடைபெற்றுள்ளன.திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 1.10 லட்சம் ஹெக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த மழை: சாலைகளில் தண்ணீா் தேக்கம்

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் மலைச் சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வ... மேலும் பார்க்க

செம்பட்டி அருகே காருக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் நிறுத்தியிருந்த காருக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா். சித்தையன்கோட்டையைச் சோ்ந்த சகோதரா்கள் அப்துல்லா (42), சபிபுல்லா (40), இந்தாதுல்ல... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மீண்டும் போதைக் காளான் விற்பனை

கொடைக்கானல் பகுதிகளில் மீண்டும் போதைக் காளாள் விற்பனை தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இவா்கள் நகா் ... மேலும் பார்க்க

விஜய், சீமான் போட்டியிடுவது 3-ஆவது இடத்துக்கே: அமைச்சா் இ. பெரியசாமி

விஜய், சீமான் ஆகியோா் 3-ஆவது இடத்துக்காக தோ்தலில் களம் இறங்குவதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி திமுக எம்எல்ஏவை பொதுமக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகளுக்காக வேடசந்தூா் திமுக சட்டப் பேரவை உறுப்பினரை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த தட்டாரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க