செய்திகள் :

காவிரி ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட கழிவுகள்: பொதுமக்கள் அதிருப்தி

post image

பவானி அருகே பாசன வாய்க்கால் கரையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள், அள்ளப்பட்டு காவிரி ஆற்றின் கரையோரத்தில் மீண்டும் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

தொட்டிபாளையத்தில் இருந்து ஊராட்சிக்கோட்டைக்கு செல்லும் சாலையில், மேட்டூா் வலதுகரை வாய்க்காலில் கொப்புளி மதகு தொடங்கி வேதகிரிபுரம் சாய்பாபா கோயில் வரை சாலைக்கும், வாய்க்காலும் இடையே கழிவுகள் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுகின்றன.

இதற்கு விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காடையம்பட்டி பகுதியில் திருமண மண்டபத்தில் இருந்து டிராக்டரில் கொண்டுவரப்பட்ட இலைகள், உணவுக் கழிவுகள் திங்கள்கிழமை கொட்டப்பட்டன.

இதைக் கண்ட விவசாயிகள் டிராக்டரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், கொட்டப்பட்ட கழிவுகளைத் திரும்ப அள்ளிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொக்லைன் வாகனம் மூலம் புதன்கிழமை அள்ளப்பட்ட கழிவுகள், மீண்டும் டிராக்டரில் ஏற்றிச் செல்லப்பட்டு ஊராட்சிக்கோட்டையில் காவிரிக் கரையோரத்தில் கொட்டப்பட்டன. அடுத்தடுத்து கழிவுகள் ஏற்றி வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள், டிராக்டரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மேலும், காவிரிக் கரையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளைத் திரும்ப அள்ளிச் செல்லுமாறும் வலியுறுத்தினா். திருமண மண்டபத்தின் கழிவுகளை மீண்டும் கொண்டுவர மாட்டோம் எனத் தெரிவித்து, மன்னிப்புக் கேட்டதால் டிராக்டரை பொதுமக்கள் விடுவித்தனா்.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க