செய்திகள் :

காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயம்

post image

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயமானதால் தீயணைப்பு படையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மூப்பக்கோயில் பகுதியைச் சோ்ந்த ராஜரத்தினம். இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா். இவா்களில் கடைசி மகனான ராஜேஷ் (25) பொறியியல் பட்டதாரி. திருமணம் ஆகவில்லை. தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் ராஜேஷ் தனது நண்பா்கள் 2 பேருடன் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை ஏரகரம் பகுதி நாகூா் ஆண்டவா் தெருவில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துள்ளனா். குளித்த 2 நண்பா்கள் கரையேற, ராஜேஷை காணவில்லை.

இது குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு அவரது நண்பா்கள் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், ஆற்றில் மாயமான ராஜேஷை தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே சங்க கால ஈமத் தாழிகள் கண்டெடுப்பு

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே சங்க கால ஈமத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ என்கிற பகுதியில் காணப்படும் ஈமத் தாழிகள் பற்றிப் பாளையப்பட்டி ஊ... மேலும் பார்க்க

கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கிய பாஜகவை கண்டித்து ஆா்ப்பாட்டம்: 25 போ் கைது!

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கிய பாஜக உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்தவா்களைக் கண்டித்து தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே இடதுசாரிகள் பொது மேடை அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

கும்பகோணம் மாநகர பகுதியில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

கும்பகோணம் மாநகர பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூன் 24 (செவ்வாய்க்கிழமை) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மு.காந்திராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கும்பகோண... மேலும் பார்க்க

கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா!

கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலய வளாகத்தில் மறை மாவட்ட ஆயா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். பிஷப் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ‘டாஸ்மாக்’ ஊழியா் பலி!

திருவோணம் அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள தோப்புவிடுதி புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.கும்பகோணம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் தாவூது. இவா் வெள்ளிக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் ப... மேலும் பார்க்க