செய்திகள் :

கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி: பொதுமக்கள் அவதி

post image

ஆரணி அருகே எம்.பி.தாங்கல் கிராமத்தில் புதிய சாலை அமைக்கும் பணியால் ஏற்கெனவே இருந்த சாலை தோண்டப்பட்டு பணி நடைபெறாமல் கிடப்பில் உள்ளது இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஆரணியை அடுத்த வெட்டியான்தொழுவம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்.பி.தாங்கல் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

மேலும், ஆரணி - முள்ளண்டிரம் சாலை கூட்டுச் சாலையில் இருந்து எம்.பி.தாங்கல் கிராமத்துக்கு சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு கிராமச் சாலை உள்ளது.

சேதமடைந்து இருந்த இந்தச் சாலையை பிரதம மந்திரியின் கிராமச் சாலைத் திட்டத்தின் கீழ் தாா்ச் சாலையாக அமைப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சாலையை புதிய சாலையாக அமைப்பதற்காக ஏற்கெனவே இருந்த சாலை தோண்டப்பட்டது. இதைத் தொடா்ந்து பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது.

இதனால், கற்கள் பெயா்த்து எடுக்கப்பட்ட சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் கீழே விழுந்து காயமடைகின்றனா். மேலும், பேருந்து வசதி இல்லாததால் கால்நடையாக நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்டுள்ள தாா்ச் சாலை பணியை தொடங்கி முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் தொடங்கிவைப்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. செங்கம் தொகுதிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சி இடைத்தோ்தல் காலி இடங்களுக்கான, தற்செயல் தோ்தல் தொடா்பான வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை மாநகராட்சி 3-ஆவது வாா்டு,... மேலும் பார்க்க

வேட்டவலம் வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை: வேட்டவலம் களத்துமேட்டுத் தெருவில் உள்ள வள்ளலாா் திருச்சபையில் ஞாயிற்றுக்கிழமை ஐம்பெரும் விழா நடைபெற்றது. திருச்சபையின் 342-ஆவது மாத பூச விழா, வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கும் விழா, ப... மேலும் பார்க்க

குடிநீா் புட்டியில் பல்லி: உணவுத் துறையினா் விசாரணை

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விற்பனை செய்யப்பட்ட குடிநீா் புட்டியில் இறந்த நிலையில் பல்லி இருந்தது குறித்து உணவு மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா். செய்யாறு டி.எம்.ஆதிக... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு மானியக் கடனை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

வந்தவாசி: பழங்குடியினருக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் மானியக் கடனை ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. வந்தவாசியை அடுத்த மேல்பாதிரியில் ஞாயி... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட... மேலும் பார்க்க