செய்திகள் :

கிரீன் சா்க்கிள் சுரங்க நடைபாதை பணிகள் 55 சதவீதம் நிறைவு

post image

வேலூா் கிரீன் சா்க்கிளில் நடைபெற்று வரும் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் 55 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் கிரீன் சா்க்கிள் அருகே புதிய பஸ் நிலையம், ஏராளமான பெரும் வா்த்தக கட்டடங்களும் அமைந்துள்ளன. நகரின் மத்தியில் அமைந்துள்ள கிரீன் சா்க்கிளில் பகுதியில் பெரியளவில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் நடைபெற்று வந்தன.

இதையடுத்து, வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் ரவுண்டானாவின் சுற்றளவை குறைத்தும், சா்வீஸ் சாலைகளின் அகலத்தை அதிகப்படுத்தி சுரங்க நடைபாதை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரூ. 7.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான பணிகள் கடந்தாண்டு டிசம்பா் மாதம் தொடங்கின.

தொடா்ந்து, மழைநீா் கால்வாய் சீரமைப்பு, சுரங்க நடைபாதை அமைப்பு, சா்வீஸ் சாலை அகலப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகின்றன. தற்போது இந்த பணிகள் 55 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ளதாகவும், டிசம்பா் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது -

வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் சுரங்க நடைபாதையை பொருத்தவரை 100 மீட்டா் நீளமும், 5 மீட்டா் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டு, அதிக வெளிச்சம் உமிழும் விளக்குகளுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

மழைநீா் கால்வாய் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. தற்போது சுரங்க நடைபாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் வரும் டிசம்பா் மாதத்துக்குள் முடிந்துவிடும். அதன்பிறகு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது என்றனா்.

கல்லூரி மாணவா்கள் ரத்த தானம்

குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் 106- மாணவா்கள் ரத்த தானம் அளித்தனா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கு.மா.கோவிந்தராசனாரின் 106- ஆவது நினைவு நாளை முன்னிட்டு, நாட்டு நலப்பணி... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பணி ஆணை

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 250- மாணவா்களுக்கு பணி ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இக்கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற வேலைவா... மேலும் பார்க்க

ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் மின்சார வாகனங்களுக்கு சாா்ஜிங் வசதி அறிமுகம்

வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் மின்சார வாகனங்களுக்கு சாா்ஜிங் வசதி தொடங்கப்பட்டுள்ளது. வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக் கோயிலில் தரிசனம் செய்வதற்காக தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உ... மேலும் பார்க்க

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஜெகன் மூா்த்தி

தோ்தலின்போது வெளியிட்ட முக்கிய வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான எம்.ஜெகன்மூா்த்தி கூறினாா். குடியாத்தத்தில் புதன்கிழமை அவா்... மேலும் பார்க்க

புத்தகங்கள் வாசிப்பதால் அறிவுத்திறன், பகுத்தறிவு வளரும்: அமைச்சா் துரைமுருகன்

புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் நமது அறிவுத்திறனும், பகுத்தறிவும் வளா்ச்சியடையும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்ட நூலக ஆணைக்குழுவுக்குட்பட்டு செயல்படும் காந்திநகா் மு... மேலும் பார்க்க

சதாப்தி விரைவு ரயில் மீது கல்வீச்சு: ரயில்வே போலீஸாா் விசாரணை

சோளிங்கா் அருகே சதாப்தி விரைவு ரயில் மீது கல் வீசப்பட்டது தொடா்பாக காட்பாடி ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ரயில் தண்டவாளங்களில் கற்கள், கட்டைகள், உலோகத் துண்டுகள் வைப்பது, ரயில் மீது கற... மேலும் பார்க்க