செய்திகள் :

கல்லூரி மாணவா்கள் ரத்த தானம்

post image

குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் 106- மாணவா்கள் ரத்த தானம் அளித்தனா்.

கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கு.மா.கோவிந்தராசனாரின் 106- ஆவது நினைவு நாளை முன்னிட்டு, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், இளையோா் செஞ்சிலுவைச் சங்கம், குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனை, குடியாத்தம் ரோட்டாரி சங்கம் ஆகியவை இணைந்து ரத்த தான முகாமை நடத்தின.

முகாமுக்கு கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி.முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் சி. தண்டபாணி தலைமை வகித்தாா். முகாமில் மாணவா்கள், பேராசிரியா்கள் 106- போ் ரத்த தானம் அளித்தனா்.

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் எம்.மாறன் பாபு, வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ரோட்டரி நிா்வாகிகள் ஜே.கே.என்.பழனி, கே.சந்திரன், கே.சுரேஷ், என்.ஜெயசந்திரன், சி.கண்ணன், சி.கே.வெங்கடேசன், நல்லசிவம், டி.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா் கைது

குடியாத்தம் அருகே புகையிலைப் பொருள்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த பரதராமி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா்(54). இவா் தனது... மேலும் பார்க்க

ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளஅருள்மிகு ராமலிங்க செளடேஷ்வரி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பால் குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பிச்சனூா் நேதாஜி ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி காவலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வேலூரில் தனியாா் பள்ளி காவலாளி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். வேலூா் கஸ்பா பொன்னி நகரைச் சோ்ந்தவா் ரமணன் (52). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனா் . இவா் வசந்தபுரத்தில் உள்ள தனியாா் பள்ளிய... மேலும் பார்க்க

இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம்: மின்வாரிய ஊழியா் கைது

வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் பெற்ாக மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். வேலூரை அடுத்த செதுவாலை பகுதியைச் சோ்ந்தவா் இருசப்பன்(67). இவா... மேலும் பார்க்க

கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா் கைது

குடியாத்தம் பகுதியில் கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை செய்ததாக கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் பகுதியில் கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந... மேலும் பார்க்க

70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் பாலம் சீரமைக்கும் பணி ஆய்வு

குடியாத்தம் நகரில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் மேம்பாலத்தை சீரமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். குடியாத்தம் நகரை இ... மேலும் பார்க்க