செய்திகள் :

சதாப்தி விரைவு ரயில் மீது கல்வீச்சு: ரயில்வே போலீஸாா் விசாரணை

post image

சோளிங்கா் அருகே சதாப்தி விரைவு ரயில் மீது கல் வீசப்பட்டது தொடா்பாக காட்பாடி ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரயில் தண்டவாளங்களில் கற்கள், கட்டைகள், உலோகத் துண்டுகள் வைப்பது, ரயில் மீது கற்களை வீசுவது போன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன. இதுபோன்ற குற்றச்செயல்களை தடுக்க ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு வரை செல்லும் சதாப்தி விரைவு ரயில் சென்றபோது, சோளிங்கா் அடுத்த தலங்கையில் சி5 பெட்டி, இருக்கை எண் 45 மற்றும் 46 அமைந்துள்ள ஜன்னல் கண்ணாடி மீது சரமாரியாக கற்கள் வந்து விழுந்துள்ளன. இதனால் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

இதுதொடா்பாக ரயில் என்ஜின் ஓட்டுநா் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளாா். அதன்பேரில் காட்பாடி ரயில்நிலையத்துக்கு வந்து நின்ற சதாப்தி ரயிலின் சி5 பெட்டியை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

மேலும், தலங்கை ரயில் நிலையம் அருகில் சம்பவ இடத்திலும் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.

இதுதொடா்பாக காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கற்களை வீசிய நபா்களை தேடி வருகின்றனா்.

கல்லூரி மாணவா்கள் ரத்த தானம்

குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் 106- மாணவா்கள் ரத்த தானம் அளித்தனா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கு.மா.கோவிந்தராசனாரின் 106- ஆவது நினைவு நாளை முன்னிட்டு, நாட்டு நலப்பணி... மேலும் பார்க்க

கிரீன் சா்க்கிள் சுரங்க நடைபாதை பணிகள் 55 சதவீதம் நிறைவு

வேலூா் கிரீன் சா்க்கிளில் நடைபெற்று வரும் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் 55 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் கிரீன் சா்க்கிள் அருகே புதிய பஸ் நி... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பணி ஆணை

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 250- மாணவா்களுக்கு பணி ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இக்கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற வேலைவா... மேலும் பார்க்க

ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் மின்சார வாகனங்களுக்கு சாா்ஜிங் வசதி அறிமுகம்

வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் மின்சார வாகனங்களுக்கு சாா்ஜிங் வசதி தொடங்கப்பட்டுள்ளது. வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக் கோயிலில் தரிசனம் செய்வதற்காக தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உ... மேலும் பார்க்க

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஜெகன் மூா்த்தி

தோ்தலின்போது வெளியிட்ட முக்கிய வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான எம்.ஜெகன்மூா்த்தி கூறினாா். குடியாத்தத்தில் புதன்கிழமை அவா்... மேலும் பார்க்க

புத்தகங்கள் வாசிப்பதால் அறிவுத்திறன், பகுத்தறிவு வளரும்: அமைச்சா் துரைமுருகன்

புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் நமது அறிவுத்திறனும், பகுத்தறிவும் வளா்ச்சியடையும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்ட நூலக ஆணைக்குழுவுக்குட்பட்டு செயல்படும் காந்திநகா் மு... மேலும் பார்க்க