செய்திகள் :

கிரீஸ் நாட்டில் கனிமொழி எம்பி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு!

post image

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவினர் கிரீஸ் நாட்டுக்குச் சென்றுள்ளனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலையான கொள்கையை எடுத்துரைக்க, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ்-க்கு நேற்று (மே 27) சென்றடைந்தனர்.

கிரீஸின் நாடாளுமன்ற ஆணையத்தின் உறுப்பினர்களுடன், பாதுகாப்பு மற்றும் வெளியுறவு ஆகிய துறைகள் குறித்து ‘அர்த்தமுள்ள உரையாடலை’ மேற்கொள்ளவும், இந்தியா - கிரீஸ் நட்புறவை வலுப்படுத்தவும் ஸ்லோவேனியாவைத் தொடர்ந்து கிரீஸ் சென்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தக் குழுவினர் இன்று (மே 28) கிரீஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் டாசோஸ் ஹட்ஜிவாசிலியோவை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

இதுகுறித்து, கிரீஸ் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகத்தின் எக்ஸ் வலைதளப் பதிவில், அனைத்துக் கட்சிக் குழுவினர் அமைச்சர் ஹட்ஜிவாசிலியோவுடன் கணிசமான மற்றும் பயனுள்ள உரையாடலில் ஈடுப்பட்டதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத் தன்மையைக் குறித்து எடுத்துரைத்தாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தாக்குதல்கள் குறித்து சர்வதேச அரங்கில் எடுத்துரைக்க 7 அனைத்துக் கட்சிக் குழுவினர் 33 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதில், திமுகவின் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவில் ராஜீவ் குமார் (சமாஜ்வாடி), பிரிஜேஷ் சௌத்தா (பாஜக), பிரேம் சந்த் குப்தா ( ஆர்ஜேடி), அஷோக் மிட்டல் (ஆம் ஆத்மி) மற்றும் மஞ்சீவ் சிங் புரி (ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேபாளத்துக்கான முன்னாள் தூதர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:

தாம்பரம் - திருவனந்தபுரம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, தாம்பரம்-நாகா்கோவில் உள்ளிட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து ... மேலும் பார்க்க

தமாகா நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத... மேலும் பார்க்க

சென்னைக்கு திரும்பும் மக்கள்: ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு

கோடை விடுமுறையில் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்து... மேலும் பார்க்க

நோய்களை குணப்படுத்த பாரம்பரிய முறையில் சிகிச்சை: தவறாக விளம்பரப்படுத்தினால் சட்ட நடவடிக்கை

ஹெச்ஐவி, ஆஸ்துமா, காசநோய், சா்க்கரை நோய் உள்ளிட்ட 56 நோய்களுக்கு பாரம்பரிய முறையில் சிகிச்சையளித்து பூரணமாக குணப்படுத்துவதாக தவறாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந... மேலும் பார்க்க

அரசின் சேவைகளை விரைவாகப் பெற ‘எளிமை ஆளுமை’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

தமிழ்நாடு அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாகப் பெற வகை செய்யும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது, இந்தத் திட்டத்தை... மேலும் பார்க்க

சிலிண்டா் வெடித்து விபத்து: தொழிலாளி பலத்த காயம்

சென்னை அருகே மாதவரத்தில் சிலிண்டா் வெடித்ததில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் கிஷோா் பீா்கா்மா (25). இவா், சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் தங்கியிருந... மேலும் பார்க்க