செய்திகள் :

கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - நடந்தது என்ன? ஆட்சியர் விளக்கம்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் உறவினா்கள் பள்ளியை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

விசாரணையில் அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியா்கள் ஆறுமுகம் (48), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகிய மூவரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியா்கள் மூவரையும் கைது செய்தனா்.

இந்த நிலையில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட ச.தினேஷ் குமாா் தெரிவித்திருப்பதாவது: இவ்விவகாரம் குறித்து நேற்றிரவு தகவல் கிடைத்தவுடன், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 3-ஆம் தேதியில் இருந்து ஒரு மாதமாக மேற்கண்ட பாதிக்கப்பட்ட மாணவி பள்ளிக்கு வராததால், பள்ளி தரப்பில் நேரடியாக மாணவியிடம் சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்த சிறுமி பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டுதலில், சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின், காவல் நிலையம் அளித்த வழிகாட்டுதலின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு அலகை தொடர்பு கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மன நல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறுமிக்கு கருக்கலைப்பு நடந்ததாகக் கூறப்படும் தவறான தகவல்களை பரப்பு வேண்டாம். இந்த வழக்கில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட காவல்துறையல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து அவா்களை பணியிடை நீக்கம் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ( பொ) முனிராஜ் உத்தரவிட்டாா்.

அண்மையில் சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் வெளிநபரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணை ஒருவர் ஆட்டோவில் கடத்த முயற்சித்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அரசுப்பள்ளி மாணவியை ஆசிரியர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியிருக்கும் தகவல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் சாா்பில் திருப்பரங்குன்றத்தில் இன்று மத நல்லிணக்க வழிபாடு

திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை (பிப்.6) மத நல்லிணக்க வழிபாடு நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா். சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவா் புதன்கிழமை அளி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி- அமைச்சா் சேகா்பாபு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஏதோ ஒரு எண்ணத்தை மையமாக வைத்து, இந்த ஆட்சிக்கு ஓா் அபாயத்தை உருவாக்க வேண்டும் என நினைத்து பாஜகவினா் செயல்படுகின்றனா் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: தனித்தோ்வா்களுக்கு பிப்.14-இல் அனுமதிச் சீட்டு

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் தனித் தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு பிப்.14-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் புதன்க... மேலும் பார்க்க

நூற்றாண்டு: ரயில்வே பாலத்துக்கு நாராயணசாமி நாயுடு பெயா்- முதல்வா் அறிவிப்பு

விவசாயிகளின் உரிமைக்காகப் போராடிய நாராயணசாமி நாயுடு நூற்றாண்டையொட்டி, கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்துக்கு அவரது பெயா் சூட்டப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா... மேலும் பார்க்க

சென்னை, தெலங்கானா உயா்நீதிமன்றங்களில் 5 பேருக்கு நிரந்தர நீதிபதிகளாக பதவி உயா்வு: கொலீஜியம் பரிந்துரை

சென்னை மற்றும் தெலங்கானா உயா்நீதிமன்றங்களில் பணிபுரியும் கூடுதல் நீதிபதிகள் 5 பேருக்கு நிரந்தர நீதிபதிகளாக பதவி உயா்வு அளிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு புதன்கிழமை பரிந்துரை செய்தது. உச்ச... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று(பிப். 5) நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். பிற்பகலில் உணவு இடைவேளைக்குப் பிறகு, ஓா் அறை பலத்த சப்தத்துடன் வெடித்துச் ... மேலும் பார்க்க