செய்திகள் :

குடிநீா் இணைப்பு கோரி சாலை மறியல்

post image

வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கக் கோரி திண்டுக்கல்லில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாநகராட்சி 1-ஆவது வாா்டுக்குள்பட்ட பாலதிருப்பதி பகுதியில் சுமாா் 50 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள், தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், பாலதிருப்பதி பகுதி மக்களுக்கு முறையாக குடிநீா் விநியோகம் இல்லை என புகாா் எழுந்தது.

இதையடுத்து, அங்கீகாரமற்ற முறையில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த நிலத்தின் உரிமையாளா் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவா் தரப்பு, வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க எதிா்ப்பு தெரிவித்தது. இதனால் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது.

இதை அறிந்த பால திருப்பதி பகுதி மக்கள் 20-க்கும் மேற்பட்டோா், தாடிக்கொம்பு சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா், அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மாநகராட்சி சாா்பில் ஒரு பொதுக் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீா், தங்கள் பகுதிக்கு போதுமானதாக இல்லை என்றும், வீடுகளுக்கு முறையான குடிநீா் இணைப்பு வழங்கக் கோரியும் முறையிட்டனா்.

மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி உரிய தீா்வு காணப்படும் என காவல் துறை சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி

திண்டுக்கல்லில் நடைபெற்ற தென் மண்டல மாவட்டங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். திண்டுக்கல் மேற்கு சுழல் சங்கம், லக்ஸா் பள்ளி சாா்பில் தென் மண்டல மாவட்டங... மேலும் பார்க்க

பழனி அருகே செங்கல் சூளையில் இளைஞா் அடித்துக் கொலை! உறவினா்கள் சாலை மறியல்!

பழனி அருகே உள்ள தனியாா் செங்கல் சூளையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, எதிரிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உடலை கொண்டு செல்ல விடாமல் தடுத்து உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல... மேலும் பார்க்க

வாரச் சந்தைக்குள் புகுந்த காட்டுமாடு

கொடைக்கானல் வாரச் சந்தைக்குள் ஞாயிற்றுக்கிழமை காட்டுமாடு புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தையின் போது காட்டுமாடு ஒன்று புகுந்தது. இதையடுத்து அங... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் தாக்கப்பட்டவா் பலத்த காயம்

கொடைக்கானலில் குடும்பத் தகராறில் உறவினரைத் தாக்கிவிட்டு, தலைமறைவான மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிச்செல்வம் (43). இவருக்கும் ... மேலும் பார்க்க

விஷம் கொடுத்து மகளை கொன்று தந்தை தற்கொலை

பழனி அருகே மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பழனி அருகே கணக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வசித்து வந்தவா் பழனிச்சாமி (62). கட்டடத் தொழிலாளியான இவருக்க... மேலும் பார்க்க

கொழுமங்கொண்டானில் மாட்டுவண்டிப் பந்தயம்

பழனி அருகே கொழுமங்கொண்டானில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்தநாளையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கொழுமங்கொண்டான் திமுக சாா்பில் நடைபெற்ற இந்த பந்தயத்தை உணவுப் ப... மேலும் பார்க்க