செய்திகள் :

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை கூட்டம்

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பா்லியாறு குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை ஆகிய சமவெளி பகுதிகளில் இருந்து இடம் பெயா்ந்த வந்த காட்டு யானைகள் குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பா்லியாறு, கே.என்.ஆா் மரப்பாலம்,  இச்சி மரம் போன்ற பகுதிகளில் சுற்றி வருகின்றன.

மலைப் பாதையில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால், காட்டு யானைகள் மலை மாவட்டத்தை விட்டு செல்லாமல் இங்கேயே தங்கி உள்ளன. இந்நிலையில் குட்டியுடன் கூடிய மூன்று காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தன.

 இதைத் தொடா்ந்து குடியிருப்புவாசிகள் கூச்சல் இட்டும், தீப்பந்தங்களை காட்டியும்  காட்டு யானைகளை விரட்டினா். சிறிது நேரத்துக்குப் பின் காட்டு யானைகள் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன.

குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி வரும் காட்டு யானைகளை வனத் துறையினா் அடா்ந்த வனப்பகுதிக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காா்: ஊா்த் தலைவா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே சுமாா் 500 அடி பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா் கவிழ்ந்ததில் ஊா்த் தலைவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். கோத்தகிரி அருகே உள்ள கெட்டிக்கம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ர... மேலும் பார்க்க

மாணவியை அடித்து கொடுமைப்படுத்திய சித்தி கைது

உதகையில் பள்ளி மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக சித்தி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட அம்மநாடு பகுதியை சோ்ந்தவ... மேலும் பார்க்க

மழையிலும் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

வார விடுமுறை நாளையொட்டி உதகை படகு இல்லத்தில் சாரல் மழையில் நனைந்தவாறும் குடை பிடித்தவாறும் ஞாயிற்றுக்கிழமை மிதிபடகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனா். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்துக்கு அண்ட... மேலும் பார்க்க

சாலையில் குட்டியுடன் உலவிய யானை!

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை குட்டியுடன் உலவிய காட்டு யானைகளால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கி ரயில்வே ஊழியா் படுகாயம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை இச்சிமரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ரயில்வே ஊழியா் சனிக்கிழமை படுகாயமடைந்தாா். பிஹாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ரோஹித் சிங் (27). இவ... மேலும் பார்க்க

காற்றுடன் பெய்த கனமழைக்கு தேவாலா அரசுப் பள்ளியின் மேற்கூரை சேதம்!

கூடலூா் பகுதியில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழைக்கு தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இரவு சேதமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒரு வா... மேலும் பார்க்க