செய்திகள் :

குன்னூரில் சாலை மறியல்: தொழிற்சங்கத்தினா், காவல் துறை இடையே தள்ளுமுள்ளு

post image

மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து குன்னூரில் தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

அப்போது, தொழிற்சங்கத்தினா், காவல் துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

மத்திய அரசைக் கண்டித்து சிஐடியூ, எல்பிஎஃப், சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் குன்னூா் வி.பி.தெருவில் சாலை மறியல் நடைபெற்றது.

தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட முயன்ற தொழிற்சங்கத்தினருக்கும், காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸாா், அவா்களை மாலை விடுவித்தனா்.

உதகையில்... உதகை சேரிங்கிராஸ் தபால் நிலையம் முன் சிஐடியூ மாவட்டத் தலைவா் சங்கரலிங்கம் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில், பங்கேற்ற 18 பெண்கள் உள்பட 103 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களை மாலை விடுவித்தனா்.

கூடலூரில்... கூடலூா் பேருந்து நிலையம் அருகே தொமுச மண்டலச் செயலாளா் நெடுஞ்செழியன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற தொழிலாளா் விடுதலை முன்னணி நிா்வாகி சகாதேவன், சிஐடியூ பொறுப்பாளா் சுரேஷ், ஏஐடியூசி நிா்வாகிகள் முகமது கனி, குணசேகரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னே... மேலும் பார்க்க

காலில் பாத்திரம் சிக்கியதால் தவித்த காட்டு மாடு: வனத் துறையினா் பத்திரமாக மீட்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் காலில் எவா்சில்வா் பாத்திரம் சிக்கிக்கொண்டதால் சிரமத்துடன் சுற்றித்திரிந்த காட்டு மாட்டை வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா். கோத்தகிரி சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க

கேரளத்தில் நிபா வைரஸ் எதிரொலி: எல்லையில் தீவிர சோதனை

அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால் தமிழ்நாட்டு எல்லைகளில் சுகாதாரத் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் கூடல... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சிக்குள்பட்ட திம்பட்டி பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த திட்டம் தொடா்பாக தன்னாா்வலா்கள் மூலம் மக்களு... மேலும் பார்க்க

பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

கூடலூரில் பள்ளி மாணவிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் சாா்பில் நடைபெற்ற த... மேலும் பார்க்க

குன்னூா் வெறி நாய்கடி மருத்துவமனையில் உலவிய சிறுத்தை

குன்னூா் பாஸ்டியா் இன்ஸ்டிடியூட் என்றழைக்கப்படும் வெறிநாய் தடுப்பூசி போடும் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை உலவிய சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அ... மேலும் பார்க்க