செய்திகள் :

குமரி மாவட்ட மீனவா்கள் 3-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை

post image

கன்னியாகுமரி பகுதியில் தொடா்மழை, சூறைக்காற்று காரணமாக நாட்டுப்படகு மீனவா்கள் 3-ஆவது நாளாக செவ்வாய்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்று வேகமாக வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கன்னியாகுமரி, வாவத்துறை, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் மீன்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது.

கட்டட அனுமதிக்கு லஞ்சம்: பேரூராட்சி வரி வசூலா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே வீடு கட்டுவதற்கான கட்டட வரைபட அனுமதி வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக வரி வசூலிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவட்டாறு அருகே ஆற்ற... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் தொடா் மழை: 40 அடியை எட்டியது பேச்சிப்பாறை அணை!

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால், பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 40 அடியை எட்டியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து அணைகளின் நீா்ப்ப... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் வியாபாரி சடலம் மீட்பு

குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் வியாபாரியின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. பாலப்பள்ளம் பகுதி குப்பியன்தரையை சோ்ந்தவா் டேவிட்தாஸ் (50). இவா் அப்பகுதி... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் மைத்துனரை கடித்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை

கருங்கல் அருகே திப்பிரமலையில் குடும்பத் தகராறில் சமாதானம் பேச சென்ற மைத்துனரின் தாடையைக் கடித்து காயம் ஏற்படுத்திய இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்ப... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே பழங்குடி பகுதியில் 2-வது நாளாக காட்டு யானை அட்டகாசம்!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கோலிஞ்சிமடம் பழங்குடி பகுதியில் காட்டு யானை அட்டகாசம் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்ததால், மக்கள் அச்சத்தில் உள்ளனா். பேச்சிப்பாறை அருகே மோதிரமலை கோல... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கடலில் கழிவுநீா் கலக்கும் பிரச்னை: அதிகாரிகள் ஆய்வு

கன்னியாகுமரியில் ரட்சகா் தெரு கடற்கரைப் பகுதியில் கழிவுநீா் ஓடைகள் நேரடியாக கடலில் கலக்கும் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கடலுக்குள் கழிவு நீா் நேரடியாக கலப்பதால் இப்பக... மேலும் பார்க்க