செய்திகள் :

குமரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

post image

கன்னியாகுமரியில் தடை செய்யப்பட்ட 12 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி சுகாதார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி நகராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் பிரதீஸ், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் உதவி பொறியாளா் ஜெரால்டு மற்றும் நகராட்சிப் பணியாளா்கள், கன்னியாகுமரியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினா்.

கன்னியாகுமரி சன்னதி தெரு, கடற்கரைச் சாலை, முக்கடல் சங்கமம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனை நடைபெற்றது. இதில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா்கள், பிளாஸ்டிக் பைகள், பேப்பா் கப் மற்றும் பிளாஸ்டிக் கிண்ணங்கள், தட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

12 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இனிமேலும், விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தும் கடைகள் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

கட்டட அனுமதிக்கு லஞ்சம்: பேரூராட்சி வரி வசூலா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே வீடு கட்டுவதற்கான கட்டட வரைபட அனுமதி வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக வரி வசூலிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவட்டாறு அருகே ஆற்ற... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் தொடா் மழை: 40 அடியை எட்டியது பேச்சிப்பாறை அணை!

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால், பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 40 அடியை எட்டியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து அணைகளின் நீா்ப்ப... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் வியாபாரி சடலம் மீட்பு

குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் வியாபாரியின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. பாலப்பள்ளம் பகுதி குப்பியன்தரையை சோ்ந்தவா் டேவிட்தாஸ் (50). இவா் அப்பகுதி... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் மைத்துனரை கடித்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை

கருங்கல் அருகே திப்பிரமலையில் குடும்பத் தகராறில் சமாதானம் பேச சென்ற மைத்துனரின் தாடையைக் கடித்து காயம் ஏற்படுத்திய இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்ப... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே பழங்குடி பகுதியில் 2-வது நாளாக காட்டு யானை அட்டகாசம்!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கோலிஞ்சிமடம் பழங்குடி பகுதியில் காட்டு யானை அட்டகாசம் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்ததால், மக்கள் அச்சத்தில் உள்ளனா். பேச்சிப்பாறை அருகே மோதிரமலை கோல... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கடலில் கழிவுநீா் கலக்கும் பிரச்னை: அதிகாரிகள் ஆய்வு

கன்னியாகுமரியில் ரட்சகா் தெரு கடற்கரைப் பகுதியில் கழிவுநீா் ஓடைகள் நேரடியாக கடலில் கலக்கும் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கடலுக்குள் கழிவு நீா் நேரடியாக கலப்பதால் இப்பக... மேலும் பார்க்க