கும்பகோணம் ஜெய மாருதி ஆஞ்சனேயருக்கு ராஜ அலங்காரம்
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ ஜெய மாருதி ஆஞ்சனேயா் கோயிலில் புதன்கிழமை ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு சுவாமி காட்சியளித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நீலத்தநல்லூா் சாலையில் உள்ளது ஸ்ரீ ஜெய மாருதி ஆஞ்சனேயா் கோயில். இந்தக் கோயிலில் ஆனி மாத அமாவாசை நாளை முன்னிட்டு ஆஞ்சனேயருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தாா். முன்னதாக கோயில் வளாகத்தில் கணபதி, விக்னேஷ்வர ஹோமத்துடன் பூஜைகள் நடைபெற்று ஸ்ரீ ஜெய மாருதி ஆஞ்சனேயருக்கு அபிஷேக, தீபாரதனைகள் நடைபெற்றன. இதில், கலந்து கொண்ட பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தா்கள் நோ்த்திக் கடனுக்காக தேங்காயை கோயிலுக்கு வழங்கினா்.