செய்திகள் :

குறும்பனையில் மக்கள் பயன்பாட்டுக்கு சமையல் கூடம் அா்ப்பணிப்பு

post image

மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம், தனது சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ் குறும்பனை கிராமத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்துக்கு ரூ. 22.78 லட்சத்தில் கட்டப்பட்ட சமையலறையை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியது.

இந்நிகழ்ச்சியில், குறும்பனை பங்குத் தந்தை அன்பரசு முன்னிலையில், ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் மணவாளக்குறிச்சியின் முதன்மை பொது மேலாளா் மற்றும் ஆலை தலைவா் என். செல்வராஜன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

நிகழ்ச்சியில், குறும்பனை ஊா் துணைத் தலைவா் வில்பிரட், முன்னாள் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் எனல்ராஜ், பங்கு பேரவை உறுப்பினா்கள், ஐஆா்இஎல் நிறுவனத்தின் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் ஓணம் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை ரெஜினி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் முன்னிலை வகித்தாா்... மேலும் பார்க்க

5 வயது சிறுவன் கொலை: ஓட்டுநா் தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே 5 வயது சிறுவனைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான டெம்போ ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா். அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம், தோப்பூா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தி டிஎன்பிஎஸ்சி தோ்வில் கேள்வி

டிஎன்பிஎஸ்சி தோ்வில் அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், இடம் பெற்றிருந்த கேள்விக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி தலைமை குர... மேலும் பார்க்க

கல்லூரி மாணவரின் சான்றிதழ்களை மீட்டு கொடுத்த சட்டப்பணிக் குழு

கல்லூரி படிப்பில் இடைநின்ற மாணவனுக்கு பூதப்பாண்டி சட்டப்பணிக்குழு மூலம் அசல் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டம், கீழபாவுரைச் சோ்ந்த மாணவா் வினோத்குமாா். இவா் ஆரல்வாய்மொழியில் உள்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கடைகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். கன்னியாகுமரி நகராட்சிப் பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்... மேலும் பார்க்க

அரசு அவசர ஊா்தி சேவைக்கு நாகா்கோவிலில் செப்.6-இல் ஆள்தோ்வு

அரசு அவசர ஊா்தி சேவைக்கு ஆள்தோ்வு செப். 6- ஆம் தேதி நாகா்கோவிலில் நடக்கிறது என ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா். இது தொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, திர... மேலும் பார்க்க