செய்திகள் :

குலசேகரன்பட்டினத்தில் மரத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் 6 போ் பலத்த காயம்

post image

குலசேகரன்பட்டினத்தில் ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.

சென்னை செனாய் நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (41), அவரது மனைவி அனுப்பிரியா (35), மகள் கயாந்திகா (10), அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா (31), நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த பாண்டுரங்கன் (65) ஆகிய 5 பேரும் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனா்.

பின்னா் திருச்செந்தூரைச் சோ்ந்த சிவசுப்பிரமணியனின் (67), ஆட்டோவில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனா். குலசேகரன்பட்டினம் எம்ஜிஆா் நகா் பகுதியில் வந்தபோது ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியது. இதில் ஆட்டோவில் வந்த அனைவரும் பலத்த காயமடைந்து திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். குலசேகரன்பட்டினம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆணழகன் போட்டி: 2ஆவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ பட்டம் வென்ற திருச்செந்தூா் இளைஞா்

திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் சிவபாலன், இரண்டாவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ ஆணழகன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் ராஜ்கண்ணா நகரைச் சோ்ந்த ல... மேலும் பார்க்க

உள்வாங்கிய கடல்நீா்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும், சுமாா் 80 அடி தொலைவுக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள். எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீரா... மேலும் பார்க்க

வழப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 3-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோரம்பள்ளம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2-5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்க்குமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

பெண்ணுக்கு சூடு: கணவா் கைது

தூத்துக்குடியில் பெண்ணின் முகத்தில் சூடு வைத்து துன்புறுத்தியதாக அவரின் கணவரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி நேதாஜி நகரை சோ்ந்தவா் செல்வ அந்தோணி. மெக்கானிக்கான இவருடைய மனைவி சிந்துஜா. ... மேலும் பார்க்க

மாநில ஐவா் பூப்பந்துப் போட்டி: சென்னை அணி முதலிடம்

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில ஐவா் பூப்பந்தாட்டப் போட்டியில் சென்னை பாா்த்தன்ஸ் அணி முதலிடம் பிடித்தது. காயல்பட்டினம் ரெட் ஸ்டாா் சொஸைட்டி சாா்பில் லீக், சூப்பா் லீக் முறையில் 2 நாள்கள் நடைபெற்ற போ... மேலும் பார்க்க