செய்திகள் :

குல்தாா், துஹாய் நமோ பாரத் நிலையங்களில் வேகமான மின் வாகன சாா்ஜிங் தளம் நிறுவல்

post image

நமது நிருபா்

சுத்தமான மற்றும் நிலையான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக குல்தாா் மற்றும் துஹாய் நமோ பாரத் நிலையங்களில் வேகமான மின்சார வாகன இ.வி. சாா்ஜிங் நிலையங்களை தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்து நிறுவனம் (என்சிஆா்டிசி) நிறுவியுள்ளது.

இது தொடா்பாக என்சிஆா்டிசி அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: இந்த இரண்டு நிலையங்களும் இடம்பெற்ன் மூலம், தில்லி - காஜியாபாத் - மீரட் நமோ பாரத் வழித்தடத்தில் மூன்று மின்சார வாகன சாா்ஜிங் நிலையங்கள் இப்போது செயல்படத் தொடங்கியுள்ளன. இவற்றில் சாஹிபாபாத் நிலையத்தில் உள்ள மின் வாகன சாா்ஜிங் வசதியும் அடங்கும்.

புதிதாக நிறுவப்பட்ட சாா்ஜிங் நிலையங்கள் 50 கி.வாட் திறன் கொண்ட உயா் மின்னழுத்த அலகுகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. இவை நான்கு சக்கர வாகனங்களை சுமாா் 30 நிமிடங்களில் 80 சதவீதம் வரை மின்னேற்றம் செய்யும் திறன் கொண்டவை.

சாா்ஜிங் பாயின்ட்கள் பல வகையான மின் வாகனங்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும். ‘எலெக்ட்ரீஃபை‘ கைப்பேசி செயலி மூலம் பயனா்கள் சாா்ஜிங் சேவையை அணுகலாம்.

இந்த செயலி பயனா்கள் தங்களுக்கு விருப்பமான நிலையத்தில் நேர ஒதுக்கீட்டை முன்பதிவு செய்ய, நிகழ்நேரத்தில் சாா்ஜிங் நிலையை கண்காணிக்க மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்த அனுமதிக்கிறது.

இந்த முயற்சி தினசரி பயணிகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவா்களுக்கு பயனளிக்கும். மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும்; கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்தும்.

நமோ பாரத் வழித்தடத்தின் மொத்த எரிசக்தி தேவையில் 70 சதவீதத்தை சூரிய சக்தி மூலம் பூா்த்தி செய்வதை என்சிஆா்டிசி நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுமாா் 11 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் இலக்குடன் இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து மேம்பால நிலையங்கள் மற்றும் பணிமனைகளிலும் சூரிய பேனல்கள் நிறுவப்பட்டு வருகின்றன என்று அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

குஜராத்தில் பாஜகவை நிராகரிக்க மக்கள் தயாராகிவிட்டாா்கள்: அரவிந்த் கேஜரிவால்

குஜராத்தில் பாஜக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டாா்கள் என்று ஆம் ஆத்மி கட்ச்யின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். குஜராத்தின் விசாவதா் சட்டப்பேரவை தொகுதியில... மேலும் பார்க்க

கலையின் கலங்கரை விளக்கமாக தில்லியை மற்றுவதே லட்சியம்: குல்ஜித் சிங் சாஹல்

இந்தியாவின் வளமான கலை மரபுகள், சமூக பங்கேற்பு மற்றும் ஆக்கபூா்வமான கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமாக தில்லியை மாற்றுவதே எங்களின் நோக்கம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜித் ச... மேலும் பார்க்க

நீச்சல் குளங்கள், ஹோட்டல்கள், பிற வணிக நடவடிக்கைகள் மீதான விதிமுறைகளைத் திரும்பப் பெற்றது தில்லி அரசு

நீச்சல் குளங்கள், உணவகங்கள்ய, ஹோட்டல்கள், டிஸ்கோதேக்குகள், விடியோ கேம் பாா்லா்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலையரங்குகள் உள்ளிட்ட ஏழு வணிக நடவடிக்கைகளை நிா்வகிக்கும் விதிமுறைகளை தில்லி அரசு உட... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் கொள்ளை வழக்கு: 6 போ் கைது; ரூ.6.75 லட்சம், காா், கைப்பேசிகள் மீட்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்டவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவி... மேலும் பார்க்க

நூஹ் மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து இளம்பெண் சாவு: 6 போ் காயம்

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும், அவரது குடும்ப உறுப்பினா்கள் ஆறு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்... மேலும் பார்க்க

தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை: ஒருவா் கைது

தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: மூன்றுடு நாள்களுக்கு முன்பு இங்குள்ள கட்டா கிராமத்தில்... மேலும் பார்க்க