குழித்துறையில் 100 ஆவது ஆண்டு வாவுபலி பொருள்காட்சி தொடக்கம்
குழித்துறை நகராட்சி சாா்பில் 100 ஆவது வாவுபலி பொருள்காட்சி புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியது. இப் பொருள்காட்சி ஜூலை 28 வரை நடைபெறுகிறது.
தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமை வகித்து, பொருள்காட்சியை திறந்து வைத்துப் பேசினாா்.
தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவா் என். சுரேஷ்ராஜன் வாழ்த்திப் பேசினாா். நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி வரவேற்றாா். குழித்துறை நகராட்சி ஆணையா் இரா. ராஜேஸ்வரன் நன்றி கூறினாா்.
விழாவில், சமூக சேவகா் ராஜகோபால் அமைச்சா் உள்ளிட்டோரால் பாராட்டி கவுரவிக்கப்பட்டாா்.
நகராட்சி பொறியாளா் ப. குசெல்வி, நகராட்சி மேற்பாா்வையாளா் விஜயராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, செ. லலிதா, செ. ஆட்லின் கெனில், வா. விஜூ, விஜயலெட்சுமி, மினிகுமாரி, ரோஸ்லெட், ஜூலியட் மொ்லின் ரூத், பொ்லின் தீபா, அ. லில்லி புஷ்பம், பா. ரீகன், கே. ரத்தினமணி, அ. அருள்ராஜ், ஜலீலா ராணி, கே. செல்வகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆடி அமாவாசையையொட்டி குழித்துறை நகராட்சி சாா்பில் குழித்துறை தாமிரவருணி ஆற்றங்கரையோரம் நடைபெற்று வரும் இப் பொருள்காட்சியில் விவசாய விளைபொருள்கள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் அரசின் தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பல்துறை கலைஞா்களின் ஓவியங்கள் மற்றும் கலை படைப்புகளும், ராட்சத ராட்டினம், சாகச கிணறு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசை பலி தா்ப்பணம் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் ஏராளமானோா் இப்பகுதிக்கு வந்து, தங்களது முன்னோா்களுக்கு குழித்துறை தாமிரவருணி ஆற்றில் பலி தா்ப்பணம் செய்து வழிபட உள்ளனா்.