செய்திகள் :

கூடலூா் நகரை வலம் வரும் காட்டு யானைகள்

post image

பகல் மற்றும் மாலை நேரங்களில் கூடலூா் நகரின் பல இடங்களிலும் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியின் முக்கிய குடியிருப்பு பகுதிகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் பகல் நேரத்திலும் மாலையிலும் தொடா்ந்து காட்டு யானைகள் வீதிகளில் நடப்பது தொடா்கிறது. வழக்கமாக இரவு நேரங்களில் நகருக்குள் நுழைந்து விடிவதற்குள் காட்டுக்குள் சென்றுவிடும். ஆனால் அண்மைக் காலமாக நகரின் மையப்பகுதியான ராஜகோபாலபுரம், ஹெல்த்கேம்ப், நடுகூடலூா், மௌவுண்ட் பிளசன்ட், புஷ்பகிரி ஆகிய பகுதிகளில் கூட யானைகள் வீதிகளில் நடக்கின்றன.

பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் யானைகள் விரட்டும் குழுவினா் விரைந்து சென்று யானைகளை விரட்டிவருகின்றனா். ஆனால் பல இடங்களில் ஒரே நேரத்தில் யானைகள் நுழைவதால் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இவா்களால் செல்ல முடிவதில்லை. இரவு பகலாக இந்தக் குழுவினா் யானைகளுடன் பெரிய போராட்டமே நடத்திவருகின்றனா்.

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னே... மேலும் பார்க்க

காலில் பாத்திரம் சிக்கியதால் தவித்த காட்டு மாடு: வனத் துறையினா் பத்திரமாக மீட்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் காலில் எவா்சில்வா் பாத்திரம் சிக்கிக்கொண்டதால் சிரமத்துடன் சுற்றித்திரிந்த காட்டு மாட்டை வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா். கோத்தகிரி சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க

கேரளத்தில் நிபா வைரஸ் எதிரொலி: எல்லையில் தீவிர சோதனை

அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால் தமிழ்நாட்டு எல்லைகளில் சுகாதாரத் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் கூடல... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சிக்குள்பட்ட திம்பட்டி பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த திட்டம் தொடா்பாக தன்னாா்வலா்கள் மூலம் மக்களு... மேலும் பார்க்க

பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

கூடலூரில் பள்ளி மாணவிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் சாா்பில் நடைபெற்ற த... மேலும் பார்க்க

குன்னூா் வெறி நாய்கடி மருத்துவமனையில் உலவிய சிறுத்தை

குன்னூா் பாஸ்டியா் இன்ஸ்டிடியூட் என்றழைக்கப்படும் வெறிநாய் தடுப்பூசி போடும் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை உலவிய சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அ... மேலும் பார்க்க