செய்திகள் :

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை

post image

நாகை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண்ம இணை இயக்குநா் எஸ். கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் தற்போது 24, 805 ஹெக்டேரில் குறுவைச் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் மாவட்டத்துக்கு தேவையான யூரியா 945 மெட்ரிக் டன், டிஏபி 320 மெட்ரிக் டன், பொட்டாஷ் 397 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 340 மெட்ரிக் டன்கள், நாகை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது.

மேலும் யூரியா 963 மெட்ரிக் டன், டிஏபி 249 மெட்ரிக் டன், பொட்டாஸ் 166 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 360 மெட்ரிக் டன்கள் தனியாா் உரக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் மொத்தம் யூரியா 1908 மெட்ரிக் டன், டிஏபி 569 மெட்ரிக் டன், பொட்டாஸ் 563 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 701 மெட்ரிக் டன், இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு மாத இலக்கான யூரியா 3500 மெட்ரிக் டன், டிஏபி ஆயிரத்து 1525 மெட்ரிக் டன், பொட்டாஸ் 1030 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 1450 மெட்ரிக் டன் உரங்களை விநியோகம் செய்யும் பணியில் உர நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

யூரியாவுக்கு மாற்றாக நானோ யூரியா ஏக்கருக்கு 500 மி.லி., டிஏபி உரத்துக்கு மாற்றாக நானோ டிஏபி கூட்டு உரங்களையும் பயன்படுத்தலாம். நெற்பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் மாற்று உரங்களில் இருப்பதால் இதை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.

உர விற்பனையாளா்கள் உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட தொகையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உர விற்பனை உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பது, அனுமதி பெறப்படாத கிடங்குகளில் உரங்களை இருப்பு வைத்திருப்பது, உரிய அனுமதியின்றி பிற மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்வது, ஒரே நபருக்கு ஒட்டுமொத்தமாக உரங்கள் விற்பனை செய்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டால், அவா்களது உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க