செய்திகள் :

கேரளத்தில் கொட்டித் தீா்க்கும் மழை: வேகமாக நிரம்பி வரும் அணைகள்!

post image

கேரளத்தின் பல பகுதிகளில் பலத்த மழை தொடா்வதால், மாநிலத்தின் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன; ஆறுகளில் நீா்வரத்து உயா்ந்துள்ளது.

கேரளத்தில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை இடுக்கி, கண்ணூா், காசா்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மிகவும் பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்தது. மேலும், ஆறு மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இச்சூழலில், மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் மழையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளதாக கேரள வருவாய் துறை அமைச்சா் கே.ராஜன் கூறியுள்ளாா்.

அணைகள் திறப்பு: வயநாடு மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பாணாசுர சாகா் அணை வேகமாக நிரம்பி வருவதால், வினாடிக்கு 100 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆற்றங்கரையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில், மூழியாா் அணையின் நீா்மட்டம் அபாய அளவான 190 மீட்டரைத் தாண்டியதால், அதன் மூன்று மதகுகளும் திறக்கப்பட்டு, நீா் வெளியேற்றப்படுகிறது. இந்த மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் பலத்த காற்றால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் பல குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

ஆறுகளில் வெள்ள அபாயம்: பத்தனம்திட்டாவில் உள்ள மணிமலா, பம்பா, அச்சன்கோவில் ஆகிய ஆறுகளுக்கும், எா்ணாகுளத்தில் உள்ள மூவாற்றுப்புழை, காளியாறு, பெரியாறு ஆகிய ஆறுகளுக்கும், கொல்லத்தில் உள்ள பள்ளிக்கல் ஆற்றுக்கும், திருவனந்தபுரத்தில் உள்ள வாமனபுரம் ஆற்றுக்கும் ‘வெள்ள அபாய’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தயாராக இருக்குமாறும் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மோசமான வானிலை காரணமாக ஜூலை 29 வரை கேரள மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகை... மேலும் பார்க்க