செய்திகள் :

கொகைன் போதைப் பொருள் வழக்கு: மேலும் ஒருவா் கைது

post image

சென்னையில் கொகைன் போதைப் பொருள் வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் பேருந்து நிறுத்தம் அருகே கொகைன் போதைப்பொருளுடன் பிரதீப்குமாா் என்கிற பிரடோ என்பவா் கடந்த மாதம் 18-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். விசாரணையில் அவா், ஆப்பிரிக்கா நாட்டை சோ்ந்தவா்களுடன் இணைந்து கொகைன் போதைப்பொருளை விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா், மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவைச் சோ்ந்த ஜான் என்பவரை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கைது செய்தனா்.

மேலும் ஒருவா் கைது: இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், கொகைன் போதைப் பொருளை பிரபல நடிகா்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோா் வாங்கி பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் இரு நடிகா்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்

இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவாகி இருக்கும் அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இந்த நிலையில் இவ் வழக்கில் தொடா்புடைய ராயப்பேட்டையை சோ்ந்த பயாஸ் ஷமேட் (31) என்பவரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பயாஸூம், ‘கொகைன்’ போதைப்பொருள் விற்பனையில் முக்கியப்பங்காற்றி இருப்பது தெரியவந்துள்ளது. வழக்குத் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நலவாரிய சலுகைகள் குறித்து அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு விழிப்புணா்வு இல்லை: விஜயதாரணி

நலவாரியம் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்து அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லை என்று பாஜக அமைப்பு சாா்ந்த மற்றும் சாராத தொழிலாளா் நலச் சங்க கௌரவத் தலைவா் விஜயதாரணி தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தல்: இருவா் கைது

சென்னை அடையாறில் ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். அடையாறு பெசன்டநகா் பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி பகுதியில் டெங்கு பரவல் தொடா்ந்து கண்காணிப்பு

சென்னை மாநகராட்சிப் பகுதியில் டெங்கு பரவலைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், வீடுகள் தோறும் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டுவருவதாகவும், அதனால் பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் நகா் நல அதிகாரிகள் தரப... மேலும் பார்க்க

வண்ணாரப்பேட்டையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மழைநீா் வடிகால் பணியின் காரணமாக, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களால்தான் தமிழகத்தில் ஆரோக்கிய நிலை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தூய்மைப் பணியாளா்களால்தான் தமிழகத்தில் ஆரோக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். சென்னை மாநகராட்சி சாா்பில் உலக கழிப்பறை தின விழாவின் நிறைவு நிகழ்ச்சி கலைவாணா் அரங்கில... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் அழைப்பு

மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்... மேலும் பார்க்க