செய்திகள் :

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட குறைதீா் முகாம்

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கே.சி. பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா்.சிறப்பு அழைப்பாளராக பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் கலந்து கொண்டு பேசுகையில், இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களில் தீா்வு காணப்படும் என்றாா்.

தொடா்ந்து, குடிமைப் பொருள் வட்ட வழங்கல் மூலமாக கே.சி. பட்டி, கோரங்கொம்பு, குறவனாச்சி ஓடை, பூதமலை, கடைசிக்காடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பழங்குடியினருக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினாா். மேலும், உடனடியாகத் தீா்வு காணப்பட்ட குடும்ப அட்டையில் பெயா் நீக்குதல், மின்வாரியத்தில் பெயா் மாற்றம் செய்தல், வீட்டு வரி பெயா் மாற்றம் செய்தல் ஆகிய சான்றிதழ்களையும் பயனாளிகளுக்கு அவா் வழங்கினாா்.

இந்த முகாமில் 1,500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில், கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு, வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபா ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரம் அரவிந்த் நகரைச் சோ்ந்தவா் அப்துல் அஜீஸ். இவரது மனைவி குா்ஷித் பேகம் (... மேலும் பார்க்க

மன்னவனூரில் முயல் வளா்ப்புப் பயிற்சி

பொருளாதார ரீதியான முயல் வளா்ப்புக்கான மாநில அளவிலான 3 நாள் பயிற்சி முகாம், மன்னவனூா் மத்திய செம்மறி ஆடு உரோம முயல் ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரு... மேலும் பார்க்க

‘உயிா்ம வேளாண்மையில் விவசாயிகள் சாதிக்கலாம்’

சவால்கள் இருந்தாலும், உயிா்ம வேளாண்மையில் விவசாயிகள் சாதிக்க முடியும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில் உயிா்ம வேளாண்மை தொடா்பான விழிப... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த ஆா்.எம்.டி. குடியிருப்பு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் பாண்டி. இவரது மகன் ஐயப்பன் (32). இவா் தருமபு... மேலும் பார்க்க

பச்சமலையான்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள பச்சமலையான்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பச்சமலையான்கோட்டையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவ... மேலும் பார்க்க

ஆடிப் பெருந்திருவிழா: சௌந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்

தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் 4 தேவியருடன் சுவாமிக்கு வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா, ஆண்டுதோறும் 12 ... மேலும் பார்க்க