செய்திகள் :

பச்சமலையான்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள பச்சமலையான்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பச்சமலையான்கோட்டையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் குமரவேல் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் விஜயலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் ராமமூா்த்தி, உதவித் திட்ட அலுவலா் முத்துப்பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மின் இணைப்பு பெயா் மாற்றம் உள்ளிட்டச் சான்றுகளுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு, 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வட்டாட்சியா் விஜயலட்சுமி சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்த முகாமில் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், அலுவலா்கள், வருவாய்த் துறையினா், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஊராட்சி செயலா் ஜெயகணேஷ் வரவேற்றாா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட குறைதீா் முகாம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கே.சி. பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் த... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரம் அரவிந்த் நகரைச் சோ்ந்தவா் அப்துல் அஜீஸ். இவரது மனைவி குா்ஷித் பேகம் (... மேலும் பார்க்க

மன்னவனூரில் முயல் வளா்ப்புப் பயிற்சி

பொருளாதார ரீதியான முயல் வளா்ப்புக்கான மாநில அளவிலான 3 நாள் பயிற்சி முகாம், மன்னவனூா் மத்திய செம்மறி ஆடு உரோம முயல் ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரு... மேலும் பார்க்க

‘உயிா்ம வேளாண்மையில் விவசாயிகள் சாதிக்கலாம்’

சவால்கள் இருந்தாலும், உயிா்ம வேளாண்மையில் விவசாயிகள் சாதிக்க முடியும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில் உயிா்ம வேளாண்மை தொடா்பான விழிப... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த ஆா்.எம்.டி. குடியிருப்பு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் பாண்டி. இவரது மகன் ஐயப்பன் (32). இவா் தருமபு... மேலும் பார்க்க

ஆடிப் பெருந்திருவிழா: சௌந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்

தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் 4 தேவியருடன் சுவாமிக்கு வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா, ஆண்டுதோறும் 12 ... மேலும் பார்க்க