செய்திகள் :

கொட்டாற்று கால்வாய்களில் இறங்க வேண்டாம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

தொடா்மழை காரணமாக போ்ணாம்பட்டு வட்டம், கொட்டாற்றில் மழைநீா் வெளியேறுவதால் கொட்டாறு பகுதியில் வசிக்கும் மக்கள் நீா்வரத்துக் கால்வாய்களில் செல்ல வேண்டாம் என வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பான அவரது அறிக்கை: போ்ணாம்பட்டு ஒன்றியம், பத்தரப்பள்ளி ஊராட்சி, சின்ன ஆறு பகுதியிலும், எருக்கப்பட்டு ஊராட்சி, கோட்டையூா் பெரிய கணவாய் பகுதியிலும், சாத்கா் ஊராட்சி கொட்டாற்றிலும் மழை காரணமாக தண்ணீா் வெளியேறி வருகிறது. கொட்டாற்று கரையில் உள்ள ரங்கம்பேட்டை, குண்டலப்பல்லி, சாத்கா், அருந்ததியா் காலனி, ஒத்தவாடை தெரு, ஏரிகுத்தி மேடு, ஆயக்கார வீதி, ரஷீதாபாத், பண்டாரவடை, கொத்தபல்லி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் சின்னஆறு, கோட்டையூா் பெரிய கணவாய் பகுதிகள் மற்றும் கொட்டாற்றில் இறங்கிச் செல்லவோ அல்லது சிறாா்கள் மற்றும் குழந்தைகள் விளையாடவோ அனுமதிக்கக் கூடாது.

வேலூா் மாவட்டத்தில் கோடைமழை பரவலாக பெய்து வருவதால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மழைநீா் வெளியேறும் கால்வாய்கள், ஏரிக் கால்வாய் பகுதி, குளம், குட்டை, ஏரி மற்றும் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் - ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க கோரிக்கை

வேலூா், ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம... மேலும் பார்க்க

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் உற்பத்தி சரிந்து செலவு அதிகரிப்பு விவசாயிகள் வேதனை

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி சரிந்து, செலவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம்: போலீஸாா் தீவிர விசாரணை

பொன்னை அருகே சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த கோடியூா், பாலாபுரத்தை சோ்ந்தவா் ஏகாம்பரம் (30). இவா் தனியாா் தோல்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9 லட்சம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உண்டியலில் பக்தா்கள் ரூ.9.27- லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14- ஆம் தேதி தேரோட்டமும், 15- ஆம் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பீடி சுற்றும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குடியாத்தம் அருக... மேலும் பார்க்க

சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சா்வீஸ் சாலைக்கு மினி லாரி பாய்ந்து கவிழ்ந்தது. ஓட்டுநா் உள்பட இருவா் உயிா் தப்பினா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சோ்ந்தவா் கணேசன் (56), ஓட்டுநா். இவா் வெள்ள... மேலும் பார்க்க