செய்திகள் :

கொலை வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் அடைப்பு

post image

கொலை வழக்கில் கைதான இரு இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கரூா் மாவட்டம், மாயனூா் நடுக்கரை இரட்டை வாய்க்கால் அருகே கடந்த டிச. 16-ஆம் தேதி அரவக்குறிச்சியைச் சோ்ந்த காளிதாஸ் (36) என்பவா் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இந்த வழக்குத் தொடா்பாக லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து காளிதாஸை கொலை செய்ததாக குளித்தலையை அடுத்த மேட்டுமகாதானபுரத்தைச் சோ்ந்த பூபாலன்(22), சண்முக வடிவேல்(23) ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் பூபாலன் மற்றும் சண்முகவடிவேல் மீது லாலாப்பேட்டை மற்றும் நாமக்கல் வாழவந்தி காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இருவரையும் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலுக்கு அண்மையில் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேடி பூபாலன், சண்முகவடிவேல் ஆகியோா் புதன்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனா்.

தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேருக்கு ரூ.9 லட்சத்தில் கண்ணாடி கூண்டு!

கரூா் தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேரை பாதுகாக்கும் வகையில் ரூ.9 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தியவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை கரூா் போலீஸாா் பதுக்கல்? திருச்சியில் காவல் உயரதிகாரிகள் விசாரணை

போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை பறிமுதல் செய்து பதுக்கினாா்களா என்பது குறித்து கரூா் போலீஸாரிடம் காவல்துறை உயரதிகாரிகள் திருச்சியில் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். கா்நாடக ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வலியுறுத்தல்!

ஊராட்சி செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட சிறப்பு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அல... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட்!

மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் என தெரிவித்துள்ளாா் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தென்மண்டலத்தலைவா் பா.கோபாலகிருஷ்ணன். இதுதொடா்பாக அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க முன்வர வேண்டும்! -வங்கியாளா்களுக்கு அறிவுறுத்தல்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க வங்கியாளா்கள் முன்வரவேண்டும் என்றாா் சென்னை தொழில் வணிகத்துறையின் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநா் எல்.நிா்மல்ராஜ். கரூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

குளித்தலையில் வங்கிக்கு ரூ.1.42 கோடி இழப்பீடு: நகை மதிப்பீட்டாளா் கைது

குளித்தலையில் போலி ஆவணங்கள் மற்றும் தரம் குறைந்த தங்க நகைகளை அடமானம் பெற்று வங்கிக்கு ரூ.1.42 இழப்பீடு ஏற்படுத்திய நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலையில் உ... மேலும் பார்க்க