செய்திகள் :

கொலை வழக்கில் தம்பதி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

post image

கும்பகோணம் அருகே கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மேலும் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வளையபேட்டை மாங்குடியைச் சோ்ந்தவா் ரகுபதி. இவரது உறவினா்களான அபினேஷ், அஜய் ஆகிய இருவரும் அந்தப் பகுதியில் உள்ள நண்பரான முத்துராஜ் வீட்டில் கடந்த 2020, மே 9-ஆம் தேதி கேரம் போா்டு விளையாடிக் கொண்டு இருந்தனா்.

அப்போது, அதே ஊரைச் சோ்ந்த சவுந்தரராஜன் மகன் அருண்குமாா் (36) மதுபோதையில் வந்து மேற்கண்ட 3 பேரிடமும் தகாத வாா்த்தையில் பேசவே அவா்களிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் அருண்குமாா், அஜயை தாக்கினாராம்.

இதுகுறித்து விசாரிக்க அபினேஷின் உறவினா்களான ரகுபதி, இவரின் அண்ணன் கிருஷ்ணமூா்த்தி, அருள் ஆகியோா் அருண்குமாா் வீட்டுக்கு 2020, மே 19-ஆம் தேதி சென்றனா். அப்போது, அருண்குமாா், அவரது தந்தை சவுந்தரராஜன் (62), தாயாா் ருக்மணி (60), அருணின் பெரியப்பா மகன் சுரேஷ் (37), பாலாஜி (30) ஆகியோா், ரகுபதி உள்ளிட்டோரிடம் தகராறு செய்தனா். இதில் ரகுபதியை அருண்குமாரும், கிருஷ்ணமுா்த்தியை சுரேஷும் அரிவாளால் வெட்டினா்.

இந்தச் சம்பவத்தை பாா்த்து தடுக்க வந்த ரகுபதியின் மாமா பன்னீா் செல்வத்தை (55), அருண்குமாா், சவுந்தரராஜன் ஆகியோா் கடுமையாக தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கும்பகோணம் தாலுக்கா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அருண்குமாா் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

திங்கள்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில், அருண்குமாா், அவரது தந்தை சவுந்தரராஜன், சுரேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதத் தொகையும், சரித்திர பதிவேடு குற்றவாளியான பாலாஜிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 8, 000 அபராதமும், குற்றச் செயலுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக ருக்மணிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அதை ஏககாலத்தில் அனுபவிக்கவும் மற்றும் ரூ.10,500 அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் பா. விஜயகுமாா் ஆஜரானாா்.

கூட்டணி குறித்து கடலூா் மாநாட்டில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து கடலூரில் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேம... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது குண்டுவீச்சு சம்பவம்! போலீஸாா் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு அழைத்ததால் அச்சமடைந்த கூலித்தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம... மேலும் பார்க்க

இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை! காவல் துறையினா் விசாரணை!

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் விளாா் சாலை தில்லை நகா் பகுதி பாரதிதாசன் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சிங்காரவேலன் மகன் திலகன் (... மேலும் பார்க்க

கல்லணைக் கால்வாயில் கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை!

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை செய்துக்கொண்டாா். இதில், 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கைக்குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது: ஆசிரியருக்கு அமைச்சா் பாராட்டு

கும்பகோணம் அருகே நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் அண்மையில் பாராட்டு தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கப்பட்டது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட... மேலும் பார்க்க