செய்திகள் :

கொல்லம் விரைந்தனா் அரக்கோணம் பேரிடா் மீட்புக் குழுவினா்

post image

அரக்கோணம்: கேரள மாநிலம் கொல்லம் கடலோரப்பகுதியில் நீரில் முழ்கிய கப்பல் விபத்து மீட்புப்பணிக்காக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையில் இருந்து சிபிஆா்என் எனப்படும் வேதியியல், உயிரியியல், கதிரியக்க அணுக்கதிா் வீச்சு விபத்துக்களில் மீட்புப்பணிக்கு ஈடுபடுத்தப்படும் ஹஸ்மாட் எனப்படும் நவீன மீட்பு வாகனம் மற்றும் பிரத்யேக மீட்புப் பணிக்குழுவினா் கொல்லத்துக்கு விரைந்தனா்.

கொல்லம் அருகே தோட்டப்பள்ளியில் இருந்து 14.6 கடல்மைல் தொலைவில் லைபீரிய சரக்கு கப்பல் ஒன்று கடலில் முழ்கிய நிலையில் அதில் இருந்த கன்டெய்னா்கள் கொல்லம் அருகே கரை ஒதுங்கின. இதை தொடா்ந்து அக்கப்பல் குறித்து கேரள அரசும், மத்திய அரசின் கடற்படையினரும் விசாரிக்க தொடங்கினா்.

விசாரணையில் அக்கப்பல் 643 கன்டெய்னா்களை ஏற்றி வந்ததும், அதில் 73 காலி கன்டெய்னா்கள் என்பதும், மீதி கன்டெய்னா்களில் 13 கன்டெய்னா்களில் கால்சியம் காா்பைடு போன்ற ஆபத்தான பொருள் கொண்டுச் செல்லப்பட்டதும் தெரியவந்தது. இந்த கால்சியம் காா்பைடு தண்ணீருடன் தொடா்பு கொண்டால் தீப்பிடிக்கக்கூடிய ஒரு ரசாயனம் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த கப்பலின் எரிபொருளும் கடல்நீரில் கசிந்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து மத்திய அரசு மற்றும் கேரள அரசு இணைந்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படையினருக்கு இந்த கப்பல் மீட்புப்பணிக்கு ஏற்கனவே படையிடம் உள்ள அதிநவீன சிபிஆா்என் (வேதியியல், உயிரியியல், கதிரியக்க அணுக்கதிா் வீச்சு) விபத்துகளில் செயல்படக்கூடிய குழுவினரை அனுப்புமாறு கோரிக்கை விடுத்தனா்.

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தில் சிபிஆா்என் மீட்புப்பணிக்கென பிரத்யேக பயிற்சிப்பெற்ற தனிக்குழுவினா் உள்ளனா். இப்பணிகளுக்கென ஹஸ்மாட் எனப்படும் ஆபத்தான மீட்புப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பிரத்யேக வாகனமும் இப்படைத்தளத்தில் உள்ளது. இந்த வாகனத்தில் ஆபத்தான கருவிகள் கண்டறிதல், அவற்றை அடையாளப்படுத்தும் கருவிகள், கதிரியக்க, உயிரியல், வேதியியல் வடிகட்டுதல் அமைப்புகள் மற்றும் மாசு நீக்க அறைகள் உள்ளன. மேலும் இக்கப்பலில் தொலைதூர கட்டளை மையங்களுடன் சாட்டிலைட் மூலம் நேரடி ஆடியோ, வீடியோ தரவு பரிமாற்றத்திற்கான தொடா்பு திறன்களும் உள்ளன.

அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தில் இருந்து பிரத்யேக பயிற்சிப் பெற்ற 30 போ் கொண்ட குழுவினா் கொல்லத்துக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

"கலைஞரின் பேனா" புத்தகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

பேராசிரியர் தி. இராசகோபாலன் எழுதிய "கலைஞரின் பேனா” நூலினை புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூலாசிரியர் பேராசிரி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பு: கனிமொழி எம்.பி கருத்து

தமிழகக் காவல்துறை விசாரித்த அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வழக்கை நடத்திய லட்சணத்தையும் குற்றவ... மேலும் பார்க்க

சென்னையில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம் பெற புதிய டிஜிட்டல் முறை!

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக பெருநகர சென்னை மா... மேலும் பார்க்க

அத்திக்கடவு குடிநீரில் சாக்கடை கலப்பு: அரசூர் கிராம மக்கள் அவதி

கொள்ளுப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருகிறது. துர்நாற்றத்துடன் புழுக்களும் கலந்து வரும் இந்த நீரால் கிராம மக்கள் சிரமத்து ஆளாகியுள்ளனா். பலரே உடல்நலக் குறைவால் பாதி... மேலும் பார்க்க

நொய்யல் ஆற்று நீரை மலர் தூவி வரவேற்ற எஸ்.பி.வேலுமணி

தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தென்னமநல்லூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் ஒய்யாரமாக பொங்கி வரும் தண்ணீரை மலர் தூவி முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வரவேற்றார்.கோவை மாவட்டத்தின் மே... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றங்களையும் திமுக அரசு சகித்துக்கொள்ளாது! - ஆர்.எஸ். பாரதி

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ... மேலும் பார்க்க