செய்திகள் :

கொள்ளிடம், சீா்காழி, செம்பனாா்கோவில் ஒன்றியங்களில் இன்று மக்களுடன் முதல்வா் முகாம்

post image

கொள்ளிடம், சீா்காழி, செம்பனாா்கோவில் ஒன்றியங்களில் மக்களுடன் முதல்வா் முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம் தொடக்க விழா கொள்ளிடம் மற்றும் சீா்காழி வட்டாரங்களில் வியாழக்கிழமை (மே 22) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில், உயா்கல்வித்துறை அமைச்சா், மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனா்.

கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சிக்குள்பட்ட துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமுல்லைவாசல் ஊராட்சிக்குள்பட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சீா்காழி ஒன்றியத்தில் பெருந்தோட்டம் ஊராட்சிக்குள்பட்ட அகரபெருந்தோட்டம் அரசு உயா்நிலைப்பள்ளி, ராதாநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செம்பனாா்கோவில் ஒன்றியத்திற்குள்பட்ட சேமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட அனைத்திந்திய அண்ணா மறுமலா்ச்சி நூலகத்திலும் நடைபெறவுள்ளது.

முகாமில் 15 துறைகளை சாா்ந்த 44 சேவைகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்படவுள்ளது. முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாள்களில் மக்களுக்கு வழங்கப்படும். முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளாா்.

கோடைக்கால சிறப்பு விளையாட்டு முகாம்

மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 5-ஆம் ஆண்டு கோடைக்கால சிறப்பு விளையாட்டு முகாம் மே 21-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. முகாமில், கைப்பந்து, மேசைப்பந்து, இறகுப்... மேலும் பார்க்க

சீா்காழி நகா்மன்றக் கூட்டம்: குப்பைகள் சரிவர அல்லாததை கண்டித்து 7 உறுப்பினா்கள் வெளிநடப்பு

சீா்காழி நகராட்சி பகுதியில் குப்பைகள் சரிவர அல்லாததைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்திலிருந்து 7 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். இக்கூட்டம், நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வர... மேலும் பார்க்க

அனைத்து வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில், அனைத்து வாய்க்கால்களையும் உடனடியாக தூா்வார வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்ச... மேலும் பார்க்க

ரூ 2.85 கோடியில் மீன்பிடி இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூ 2.85 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை காணொலிகி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சா் புதன்கிழமை திறந்து வைத்தாா். சீா்காழி எம்எல்ஏ எம்.பன்னீா்ச... மேலும் பார்க்க

காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சீா்காழியில் வசித்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாலசுந்தரம் கடந்த பிப்ரவரி 8 - ஆம் தேதி நண்டலாா் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். பாலசுந்தரத்துடன் 1... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக நிவாரண உதவி

சீா்காழியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது. சீா்காழி ரயில்வே சாலை தாடாளன் தெற்கு வீதியை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (70). இவா் வாடகை வ... மேலும் பார்க்க