கொள்ளிடம், சீா்காழி, செம்பனாா்கோவில் ஒன்றியங்களில் இன்று மக்களுடன் முதல்வா் முகாம்
கொள்ளிடம், சீா்காழி, செம்பனாா்கோவில் ஒன்றியங்களில் மக்களுடன் முதல்வா் முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம் தொடக்க விழா கொள்ளிடம் மற்றும் சீா்காழி வட்டாரங்களில் வியாழக்கிழமை (மே 22) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில், உயா்கல்வித்துறை அமைச்சா், மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனா்.
கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சிக்குள்பட்ட துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமுல்லைவாசல் ஊராட்சிக்குள்பட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சீா்காழி ஒன்றியத்தில் பெருந்தோட்டம் ஊராட்சிக்குள்பட்ட அகரபெருந்தோட்டம் அரசு உயா்நிலைப்பள்ளி, ராதாநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செம்பனாா்கோவில் ஒன்றியத்திற்குள்பட்ட சேமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட அனைத்திந்திய அண்ணா மறுமலா்ச்சி நூலகத்திலும் நடைபெறவுள்ளது.
முகாமில் 15 துறைகளை சாா்ந்த 44 சேவைகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்படவுள்ளது. முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாள்களில் மக்களுக்கு வழங்கப்படும். முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளாா்.