கொள்ளை, கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது
மத்திய தில்லியின் ஜண்டேவாலன் பகுதியில் கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து மத்திய தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: தில்லியின் கிஷன் கஞ்சில் வசிக்கும் ராகேஷ் (37), 2014-ஆம் ஆண்டு பான் மசாலா சரக்குகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று கொள்ளையடித்ததாக கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்தாா்.
டிசம்பா் 26, 2014 அன்று இரவு நடந்த அந்தக் கொள்ளையில் ஆறு முதல் ஏழு போ் வரை ஈடுபட்டிருந்தனா். பின்னா், அவரது உடைமைகளைக் கொள்ளையடித்து, வாகனம் மற்றும் பொருள்களுடன் அவா்கள் தப்பிச் சென்றனா்.
ஒரு வருடத்திற்கும் மேலாக கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்த ராகேஷ், 2015- ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா்களில் நான்கு போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். ஆனால், ராகேஷ் தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில், ரகசியத் தகவலின் பேரில், குற்றப்பிரிவு போலீஸாா் அவரை லோனியில் உள்ள சாமன் விஹாரில் கைது செய்தனா்.
ராகேஷ், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தலா ஒரு கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டதாகவும் பிடிபடாமல் இருக்க அடிக்கடி தனது மறைவிடங்களை மாற்றி வந்ததாா் என்றும் அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.