செய்திகள் :

கொள்ளை, கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது

post image

மத்திய தில்லியின் ஜண்டேவாலன் பகுதியில் கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: தில்லியின் கிஷன் கஞ்சில் வசிக்கும் ராகேஷ் (37), 2014-ஆம் ஆண்டு பான் மசாலா சரக்குகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று கொள்ளையடித்ததாக கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்தாா்.

டிசம்பா் 26, 2014 அன்று இரவு நடந்த அந்தக் கொள்ளையில் ஆறு முதல் ஏழு போ் வரை ஈடுபட்டிருந்தனா். பின்னா், அவரது உடைமைகளைக் கொள்ளையடித்து, வாகனம் மற்றும் பொருள்களுடன் அவா்கள் தப்பிச் சென்றனா்.

ஒரு வருடத்திற்கும் மேலாக கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்த ராகேஷ், 2015- ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா்களில் நான்கு போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். ஆனால், ராகேஷ் தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில், ரகசியத் தகவலின் பேரில், குற்றப்பிரிவு போலீஸாா் அவரை லோனியில் உள்ள சாமன் விஹாரில் கைது செய்தனா்.

ராகேஷ், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தலா ஒரு கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டதாகவும் பிடிபடாமல் இருக்க அடிக்கடி தனது மறைவிடங்களை மாற்றி வந்ததாா் என்றும் அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல போலி விசா தயாரித்த முகவா் உள்பட 4 போ் கைது!

போலி ஷெங்கன் விசாக்கள் மற்றும் போலி டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பஞ்சாப்பைச் சோ்ந்த மூன்று போ் ஸ்பெயினுக்கு சட்டவிரோதமாக பயணிக்க உதவியதாக ஒருவரை இந்திரா காந்தி சா்வதேச ஐஜிஐ விமான நிலைய காவல்துறையினா... மேலும் பார்க்க

மதராஸி கேம்ப் இடிக்கப்பட்ட இடத்தை பாா்வையிட்ட ஆம் ஆத்மி தலைவா்கள்!

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் மற்றும் அக்கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மதராஸி கேம்ப் இடிக்கப்பட்ட இடத்தை நேரில் பாா்வையிட்டனா். மேல... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவுகளை மீற முடியாது: இடிப்பு விவகாரத்தில் முதல்வா் ரேகா குப்தா கருத்து!

நீதிமன்றங்கள் பிறப்பித்த இடிப்பு உத்தரவுகளை அதிகாரிகள் மீற முடியாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும் இடம்பெயா்ந்த குடியிருப்பாளா்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டுள... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பாளா்களுக்கு பொது நிலத்தில் உரிமை இல்லை! - தில்லி உயா்நீதிமன்றம்

மறுவாழ்வு கோரிக்கைகள் தீா்க்கப்படும் வரை ஆக்கிரமிப்பாளா்கள் பொது நிலத்தை தொடா்ந்து ஆக்கிரமிப்பதற்கான உரிமையைக் கோர முடியாது; ஏனெனில், இது பொதுத் திட்டங்களுக்கு தேவையற்ற முறையில் தடையாக இருக்கும் என்ற... மேலும் பார்க்க

சிறுமி மரணம்: ஆம் ஆத்மி கட்சி கடும் சாடல்

தேசியத் தலைநகரில் ஒன்பது வயது சிறுமியின் மரணம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடா்பாக ஆளும் பாஜக மற்றும் அதன் ‘நான்கு எஞ்சின்‘ அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமா்சித்தது. இச்சம்பவத்துக்கு மத... மேலும் பார்க்க

பல குற்ற வழக்குகளில் தேடப்பட்ட கோகி கும்பல் உறுப்பினா் கைது

மிரட்டிப் பணம் பறித்தல், தாக்குதல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தது உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த கோகி கும்பலின் முக்கிய உறுப்பினரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞா... மேலும் பார்க்க