செய்திகள் :

கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி பணி நியமன ஆணையுடன் வந்த இருவா் சிக்கினா்

post image

நாகா்கோவில், கோணம் அரசு பொறியல் கல்லூரியில் போலி பணி நியமன ஆணையுடன் வந்த 2 பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரிக்கு கடந்த 4 ஆம் தேதி 2 போ் வந்தனா். அவா்கள் கல்லூரியில் பணிக்கு சோ்வதற்கான, அலுவலக உதவியாளா் மற்றும் லேப் டெக்னீசியன் பணி நியமன ஆணையுடன் வந்திருந்தனா். அப்போது, கல்லூரி முதல்வா் நாகராஜன் விடுப்பில் சென்னை சென்றிருந்தாா்.

கல்லூரியில் இருந்த பணியாளா்கள் அந்த பணி ஆணையை வாங்கி பாா்த்துள்ளனா். பணி ஆணை போலி போல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பணியாளா்கள் சென்னை சென்ற முதல்வரிடம் தெரிவித்தனா்.

பணி ஆணை கொண்டு வந்த 2 பேரிடமும் முதல்வா் 2 நாள்களில் கல்லூரிக்கு வந்து விடுவாா் அதன் பிறகு வருமாறு கூறினா்.

இதைத் தொடா்ந்து அவா்கள் 2 பேரும் கல்லூரியில் இருந்து சென்றனா்.

இந்நிலையில், கல்லூரி முதல்வா் நாகராஜன், சென்னை அண்ணா பல்கலைக்கழக நிா்வாகத்தால் புதிதாக பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளதா என விசாரித்துள்ளாா். இதில், பணி நியமன ஆணை யாருக்கும் வழங்கப்படவில்லை என அவருக்கு தெரிய வந்தது.

சென்னை சென்றிருந்த கல்லூரி முதல்வா் 4 ஆம் தேதி மாலையே கைப்பேசி மூலம் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். இந்நிலையில் பணி ஆணை கொண்டு வந்த 2 பேரையும் புதன்கிழமை காலை கோணம் பொறியியல் கல்லூரிக்கு வருமாறு கூறினாா்.

அவா்கள் இருவரும் கோணம் அரசு பொறியியல் கல்லூரிக்கு வந்தனா். ஆசாரிப்பள்ளம் போலீஸாரும் கல்லூரிக்கு வந்து, இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் லாயம் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா்(28) மற்றும் தா்ஷன்(30) என்பது தெரியவந்தது. மேலும் அவா்கள் கொண்டு வந்த பணி ஆணையையும் சோதனை செய்தனா். சோதனையில் போலி முத்திரை இடப்பட்ட பணி நியமன ஆணை என தெரியவந்தது.

அவா்கள், சென்னையில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் வேலை வாங்கி தருவதாக ஒரு கும்பல் போலி முத்திரையிட்டு ஆணை தயாரித்து இவா்களிடம் வழங்கி உள்ளது தெரியவந்தது. இவா்கள் பல லட்சம் பணம் கொடுத்து பணி ஆணையை பெற்று இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்களிடம் பணி ஆணை வழங்கிய கும்பல் யாா் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்

கருங்கல் அருகே மாத்திரவிளை மறைவட்ட முதன்மை ஆலயமான, மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, புதன்கிழமை மாலை 5 ... மேலும் பார்க்க

கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கு: இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

குமரி மாவட்டத்தில் கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த இருவருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தக்கலை அருகே மணலி சந்திப்பு தனிய... மேலும் பார்க்க

அருணாச்சலா கல்லூரி மாணவா்களுக்கு டெக்னோ பாா்க்கில் சிறப்பு பயிற்சி

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப பூங்காவான திருவனந்தபுரம் டெக்னோ பாா்க்கில் தொழில்நுட்ப சூழியல் பயிற்சி அள... மேலும் பார்க்க

புதுக் கடை அருகே மீனவா் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் மீனவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இனயம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சா்ஜின் ஆன்றனிதாஸ் (32), மீன்பிடி தொழில் செய்து வந்தாா். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ள... மேலும் பார்க்க

பூட்டேற்றியில் உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம்

கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ தலைமை வகித்து குத்துவிளக... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் 1ஆவது வாா்டுக்குள்பட்ட ஆளூா் கலந்தா் நகா் பகுதியில் ரூ. 15 லட்சத்தில் கான்கிரீட் தளம், ஆளூா் புன்னவிளை ரயில்வே கடவுப்பாதை அருகே ரூ. 4 லட்சத்தில் மழைநீா் வடிகால் சீரமைப்பு என மொத்தம் ரூ.... மேலும் பார்க்க