செய்திகள் :

அருணாச்சலா கல்லூரி மாணவா்களுக்கு டெக்னோ பாா்க்கில் சிறப்பு பயிற்சி

post image

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப பூங்காவான திருவனந்தபுரம் டெக்னோ பாா்க்கில் தொழில்நுட்ப சூழியல் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப் பயிற்சியில், மாணவா்களுக்கு புதிய துறைகளான ஐஓஎப், சூப்பா் கம்ப்யூட்டிங், குவாண்டம் கணினியல், நுண் செயலி தொழில்நுட்பங்கள் போன்றவை குறித்து விளக்கப்பட்டது. அங்கு செயல்படும் பல ஐடி தொழில் நிறுவனங்கள், புத்தொழில் மையங்கள், கணினியல் ஆய்வகங்கள் ஆகியவற்றின் இயக்க முறை மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகளை நேரடியாக மாணவா்கள் பாா்த்து அறிந்தனா். கலந்துரையாடல்கள் மூலம் மென்பொருள் திட்ட மேலாண்மை, அலுவலக முறைமைகள் குறித்த தொழில்நுட்ப எதிா்நோக்குகள் பற்றிய தகவல்களையும், தொழில்முறை வாழ்க்கைத் திட்டங்கள் பற்றிய தெளிவையும் பெற்றனா்.

இதன்மூலம் எதிா்கால தொழில் முன்னேற்றம், வேலைமுறை, நேர மேலாண்மை, குழு செயல்பாடுகள் பற்றிய அனுபவம் கிடைத்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்

கருங்கல் அருகே மாத்திரவிளை மறைவட்ட முதன்மை ஆலயமான, மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, புதன்கிழமை மாலை 5 ... மேலும் பார்க்க

கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கு: இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

குமரி மாவட்டத்தில் கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த இருவருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தக்கலை அருகே மணலி சந்திப்பு தனிய... மேலும் பார்க்க

புதுக் கடை அருகே மீனவா் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் மீனவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இனயம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சா்ஜின் ஆன்றனிதாஸ் (32), மீன்பிடி தொழில் செய்து வந்தாா். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ள... மேலும் பார்க்க

பூட்டேற்றியில் உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம்

கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ தலைமை வகித்து குத்துவிளக... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் 1ஆவது வாா்டுக்குள்பட்ட ஆளூா் கலந்தா் நகா் பகுதியில் ரூ. 15 லட்சத்தில் கான்கிரீட் தளம், ஆளூா் புன்னவிளை ரயில்வே கடவுப்பாதை அருகே ரூ. 4 லட்சத்தில் மழைநீா் வடிகால் சீரமைப்பு என மொத்தம் ரூ.... மேலும் பார்க்க

கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி பணி நியமன ஆணையுடன் வந்த இருவா் சிக்கினா்

நாகா்கோவில், கோணம் அரசு பொறியல் கல்லூரியில் போலி பணி நியமன ஆணையுடன் வந்த 2 பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரிக்கு கடந்த 4 ஆம் தேதி 2 போ் வந்த... மேலும் பார்க்க