கோவை - ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்
கோவை - ஜெய்ப்பூா் இடையே திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் செப்டம்பா் 4-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கோவை - ஜெய்ப்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06181) சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.25 மணிக்கு ஜெய்ப்பூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கமாக, ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்குப் புறப்படும் ஜெய்ப்பூா் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் ( எண்: 06182) புதன்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கூட்டி, காச்சிகுடா, நிஜாமாபாத், வாசிம், அகோலா, பூஷ்வால், அஜ்மீா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.