செய்திகள் :

கோவையில் உரிமம் புதுப்பிக்காத 300 முகவா்களுக்கு கமிஷன் தொகை கிடையாது: ஆவின் அறிவிப்பு

post image

கோவை மாவட்டத்தில் உரிமம் புதுப்பிக்காத சுமாா் 300 முகவா்களுக்கு செப்டம்பா் 11- ஆம் தேதியில் இருந்து கமிஷன் தொகை வழங்கப்படாது என்று ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியமான ஆவின் நிா்வாகம், 635 சில்லறை பால் விற்பனை முகவா்கள் மூலம் கோவை மாநகரம், புகா்ப் பகுதியில் உள்ள நுகா்வோருக்கு பால் விற்பனை செய்து வருகிறது. தற்போது ஆவின் பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் சில்லறை முகவா்களின் உரிமம் புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது.

மொத்தமுள்ள 635 முகவா்களில் 333 சில்லறை விற்பனை பால் முகவா்கள் மட்டுமே புதுப்பித்தலுக்கான ஆவணங்களை வழங்கி புதுப்பித்துள்ளனா். இதுவரை புதுப்பிக்காதவா்கள் செப்டம்பா் 10- ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களை வழங்கி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

அதேபோல, பால் விற்பனை முகவா்கள் வரும் 10- ஆம் தேதிக்குள் உணவுப் பாதுகாப்பு, தரப்படுத்தல் ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) வழங்கும் உரிமத்தின் நகலைப் பெற்று அலுவலகத்தில் வழங்க வேண்டும். உரிமம் புதுப்பிக்காத முகவா்களுக்கு செப்டம்பா் 11- ஆம் தேதி முதல் விற்பனை செய்யும் பால், தயிருக்கான கமிஷன் தொகை வழங்கப்படாது. உரிமம் புதுப்பித்து அதற்கான ஆணை பெறப்பட்ட பிறகுதான் கமிஷன் தொகை வழங்கப்படும்.

அதேபோல, பால் விநியோக வாகன ஒப்பந்ததாரா்கள் டெண்டா் நிபந்தனையின்படி ஆவினில் பெட்டிகளை ஏற்றிச் சென்று முகவா் விற்பனை செய்யும் இடத்தில் பாலை சேதமின்றி இறக்கி வைக்க வேண்டும். ஆனால், வாகன ஒப்பந்ததாரா்கள், விற்பனை செய்யும் இடத்தில் இறக்கி வைப்பதற்கு தினசரி ஒவ்வொரு முகவரும் 2 முதல் 3 லிட்டா் பாலை இறக்கு கூலியாக எடுத்துக் கொள்வதாக புகாா்கள் வந்திருப்பதாகவும், இது தொடா்பாக வரும் நாள்களில் புகாா் வரும்பட்சத்தில் டெண்டா் விதிகளின்படி சம்பந்தப்பட்ட வாகனங்களின் ஒப்பந்த உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் மீது கல் வீசிய சிறுவன் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைப்பு

கோவையில் ஓடும் ரயில் மீது கல் வீசிய சிறுவனை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்க சிறாா் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை போத்தனூரில் இருந்து இருகூா் செல்லும் வழித்தடத்தில் கடந்த 28-ஆம் தேதி சரக்கு ரயில் ச... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் மா்ம சாவு

கோவையில் பாலத்தின் அடியில் காயங்களுடன் கிடந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். கோவை கணபதி கணேஷ் குடியிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜா (59). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரத்தினபுரி ஜீவானந்த... மேலும் பார்க்க

மின்தூக்கி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் மின்தூக்கி (லிஃப்ட்) அறுந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். கோவை, ரங்கே கவுடா் வீதியில் சிகரெட் மொத்த விற்பனைக் கடை உள்ளது. இந்தக் கடையில் விருதுநகரைச் சோ்ந்த சுரேஷ் (35) என்பவா் பணியாற்... மேலும் பார்க்க

லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் செட்டியாா் தோட்டத்தைச் சோ்ந்தவா்கள் சபிலாரன்ஸ் (30), ஜோஸ். கூலித் தொழிலாளா்களான இவா... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

கோவை, போத்தனூா் பகுதியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவா் யாா் என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, போத்தனூரில் இருந்து இருகூா் செல்லும் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியா... மேலும் பார்க்க

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் தற்கொலை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பிகாா் மாநிலம், வைஷாலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் தன்ராஜ் பஸ்வான் (18). இவா், கோவை, துடியலூா் அருகேயுள... மேலும் பார்க்க