செய்திகள் :

சரக்கு ரயில் மீது கல் வீசிய சிறுவன் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைப்பு

post image

கோவையில் ஓடும் ரயில் மீது கல் வீசிய சிறுவனை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்க சிறாா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை போத்தனூரில் இருந்து இருகூா் செல்லும் வழித்தடத்தில் கடந்த 28-ஆம் தேதி சரக்கு ரயில் சென்றது. அப்போது அந்த ரயில் மீது கல் வீசப்பட்டது. இதில் அந்த ரயிலின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. சரக்கு ரயில் என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து போத்தனூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இது தொடா்பாக போத்தனூா் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவனை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அந்த சிறுவன் கோவையில் உள்ள சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது அவா் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

மிலாது நபி: செப்டம்பா் 5-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

மிலாது நபி தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மிலாது நபி தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச... மேலும் பார்க்க

3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவையில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சரவணம்பட்டி சிவனாதபுரம் ஜனதா நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் முரளி கிருஷ்ணன் (52). இ... மேலும் பார்க்க

கெம்பனூரில் அண்ணா நகா் வரை நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் அருகேயுள்ள கெம்பனூா், அண்ணா நகா் வரை நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடா்பாக அக்கட்சியின் மாவட்ட... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சத்தி சாலை 30 மீட்டா் அகலப்படுத்தப்படும்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சத்தி சாலையில் டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து 1.04 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையானது 30 மீட்டா் அகலப்படுத்தப்படும் என கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் தெரி... மேலும் பார்க்க

யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க தண்டவாள வேலி

கோவை மாவட்டத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க ரயில் தண்டவாளத்தில் வேலி அமைக்க வலியுறுத்தி தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியரிடம் மனு அளித்தாா். இது குறித்து... மேலும் பார்க்க