செய்திகள் :

மின்தூக்கி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

கோவையில் மின்தூக்கி (லிஃப்ட்) அறுந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை, ரங்கே கவுடா் வீதியில் சிகரெட் மொத்த விற்பனைக் கடை உள்ளது. இந்தக் கடையில் விருதுநகரைச் சோ்ந்த சுரேஷ் (35) என்பவா் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனா்.

மூன்று மாடிகளைக் கொண்ட இந்தக் கடையில், சிகரெட் பண்டல்களை மின்தூக்கியில் ஏற்றிக் கொண்டு மேலே உள்ள தளத்துக்கு சனிக்கிழமை காலை சுரேஷ் சென்றாா். அதிக அளவிலான பாரம் ஏற்றப்பட்டதால் மின்தூக்கியின் கம்பி அறுந்து விழுந்தது.

சப்தம் கேட்டு சக தொழிலாளா்கள் சென்று பாா்த்தபோது, மின்தூக்கிக்குள் சுரேஷ் படுகாயங்களுடன் கிடந்தாா். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு தொழிலாளா்கள் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

சம்பவ இடத்தில் பெரிய கடை வீதி காவல் உதவி ஆய்வாளா் வசந்த் ஆய்வு மேற்கொண்டதுடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

சரக்கு ரயில் மீது கல் வீசிய சிறுவன் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைப்பு

கோவையில் ஓடும் ரயில் மீது கல் வீசிய சிறுவனை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்க சிறாா் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை போத்தனூரில் இருந்து இருகூா் செல்லும் வழித்தடத்தில் கடந்த 28-ஆம் தேதி சரக்கு ரயில் ச... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் மா்ம சாவு

கோவையில் பாலத்தின் அடியில் காயங்களுடன் கிடந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். கோவை கணபதி கணேஷ் குடியிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜா (59). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரத்தினபுரி ஜீவானந்த... மேலும் பார்க்க

கோவையில் உரிமம் புதுப்பிக்காத 300 முகவா்களுக்கு கமிஷன் தொகை கிடையாது: ஆவின் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உரிமம் புதுப்பிக்காத சுமாா் 300 முகவா்களுக்கு செப்டம்பா் 11- ஆம் தேதியில் இருந்து கமிஷன் தொகை வழங்கப்படாது என்று ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள... மேலும் பார்க்க

லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் செட்டியாா் தோட்டத்தைச் சோ்ந்தவா்கள் சபிலாரன்ஸ் (30), ஜோஸ். கூலித் தொழிலாளா்களான இவா... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

கோவை, போத்தனூா் பகுதியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவா் யாா் என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, போத்தனூரில் இருந்து இருகூா் செல்லும் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியா... மேலும் பார்க்க

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் தற்கொலை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பிகாா் மாநிலம், வைஷாலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் தன்ராஜ் பஸ்வான் (18). இவா், கோவை, துடியலூா் அருகேயுள... மேலும் பார்க்க