செய்திகள் :

கோவையில் கொட்டும் மழை: கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்!

post image

கோவையில் கொட்டும் மழைக்கு நடுவே கால்வாய்க்குள் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்தது.

கோவை மாவட்டத்தில் இன்று(மே 26) 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் கோவை உப்பிலி பாளையம் சாலையில் இன்று அதிகாலை திருச்சி சாலையில் இருந்து வேகமாக கார் ஒன்று வந்தது. காரை கேரள மாநிலம் ஆளு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார்.

அங்கு உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் கார் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் சென்ற ஆட்டோ மீது மோதியது. தொடர்ந்து தாறுமாறாக ஓடிய கார், சாலை ஓரத்தில் இருந்த கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

பள்ளத்தில் விழுந்த காருக்குள் இருந்து வெளியில் வர முடியாமல் மணிகண்டன் போராடிய நிலையில், இந்த விபத்தை பார்த்தவர்கள் உடனடியாக பீளமேடு தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கிக் கொண்ட மணிகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு பள்ளத்தில் இருந்து காரை சிங்காநல்லூர் போலீஸார் கிரேன் மூலம் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கால்வாயில் தண்ணீர் குறைந்த அளவே சென்று கொண்டு இருந்ததால் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிக்க: 9000 குதிரைத் திறன் மின்சார ரயில் இன்ஜின்: பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்!

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மியூசிக் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கேரளத்தையொட்டிய அரபிக் கடலில் ‘எல்... மேலும் பார்க்க

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உலக புகையிலை ஒழிப்பு தினம் சனிக்கிழமை (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், தலைமை ஆசிரியா்கள் தங்களது பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்... மேலும் பார்க்க

75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. துணை முதல்வா் உதயநிதியின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கன்னடம் குறித்த பேச்சில் எந்தத் தவறும் இல்லை: கமல்ஹாசன்

கன்னடம் குறித்த தனது பேச்சில் எந்தத் தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா். ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக ஒதுக... மேலும் பார்க்க

சிறுநீரக பரிசோதனை மூலம் 33,869 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் முலம் மாநிலம் முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் து... மேலும் பார்க்க