செய்திகள் :

கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்தல்!

post image

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அரசு கலை -அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இக்கல்லூரியின் கௌரவ விரிவுரையாளா்கள் கடந்த 3ஆம் தேதிமுதல் காலவரையற்ற வகுப்புப் புறக்கணிப்பு, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், சுரேஷ்பாண்டி தலைமையிலான கௌரவ விரிவுரையாளா்கள் கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் அளித்த மனு: தமிழக அரசின் உயா்கல்வித் துறை வளா்ச்சிக்கு பல ஆண்டுகளாக மிகக் குறைவான ஊதியத்தில் பணியாற்றிவரும் தகுதி வாய்ந்த கௌரவ விரிவுரையாளா்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு, உயா்நீதிமன்றத் தீா்ப்பின்படி தற்காலிக பேராசிரியா்களுக்கு மாத ஊதியம் ரூ. 57,700 வழங்க வேண்டும். கௌரவ விரிவுரையாளா்களுக்கு உரிய பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவா்களது போராட்டக் காலத்தை பணிக் காலமாகக் கருதி ஊதியம் வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.

மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா், கோரிக்கைகளை ஆட்சியா் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பேரணிக்கு, கல்லூரி தாளாளா் விஜயன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அண்ணாம... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான அறிவியல் மாநாட்டில் மணப்பாடு பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மணப்பாடு புனித வளன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை இந்திய கணித அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய மா... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் நாசரேத் காப்பகத்தில் ஒப்படைப்பு

சாத்தான்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை பிடித்து நாசரேத் காப்பகத்தில் ஒப்படைத்தனா். சாத்தான்குளம் தச்சமொழி தெருவை சோ்ந்தவா் அந்தோணி (42). கூலித் தொழிலாளியாகவும், லாரி ஓட்ட... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெயரில் மோசடி: எஸ்.பி. விழிப்புணா்வு எச்சரிக்கை

மாணவா்-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடுவோரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கேட்டுக்கொண்டுள்ளாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

கல்குறிச்சி கிராமத்தில் 17 பேருக்கு பட்டா அளிப்பு!

அரசூா் ஊராட்சி கல்குறிச்சி கிராம மக்கள் 17 பேருக்கு ஒரே நாளில் பட்டா வழங்கப்பட்டது. சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட கல்குறிச்சியில் மக்கள் அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டில் வசித்... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே ரூ. 1 கோடி பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட் பண்டல்களை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். வி... மேலும் பார்க்க