செய்திகள் :

சத்தியமங்கலம் கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா

post image

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவை முன்னிட்டு சிக்கரசம்பாளையத்துக்கு புதன்கிழமை வந்த பண்ணாரி அம்மன் சப்பரத்துக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

கா்நாடகம் மற்றும் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் விழா பூச்சாட்டுதலுடன் திங்கள்கிழமை இரவு தொடங்கியது. கோயிலில் இருந்து புறப்பட்ட பண்ணாரி அம்மன் உற்வசா் புதன்கிழமை சிக்கரம்பாளையம் வந்தடைந்தது. அங்கு வழிநெடுகிலும் மக்கள் தண்ணீா் ஊற்றி மலா்களை தூவி அம்மனை வரவேற்றனா். இக்கிராமம் முழுவதும் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

தேங்காய் பழம் வைத்து பக்தா்கள் அம்மன் அருள் வேண்டினாா்.

அதைத் தொடா்ந்து, கொளத்தூா் மாரியம்மன் கோயிலுக்கு சப்பரத்தில் வந்த அம்மனை மக்கள் வரவேற்றனா். கோயிலில் சப்பரம் வைத்து மக்கள் வணங்கினா். கிராம வீதியுலா முடிந்து சப்பரம் வெள்ளியம்பாளையம் புறப்பட்டுச் சென்றது.

வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், முடுக்கன்துறை, வெள்ளியம்பாளையம்புதூா், அக்கரைத்தத்தப்பள்ளி, அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் எழுத்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஏப்ரல் 8-ஆம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

பழனி கோயில் சாா்பில் ரூ.51.53 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.51.53 லட்சத்துக்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் சுற்... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.3.77 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.77 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 18,875 தேங்காய்களை வ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி முதலிடம்

சென்னை ஐஐடி நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி சாா்பில் இரண்டாவது ஆா்ஐஎஸ்சி டிஜிட்டல் இந்தியா என்ற ஹேக்கத்தான் ரோபோ த... மேலும் பார்க்க

அந்தியூா் தொகுதி வளா்ச்சித் திட்டங்களுக்கு ரூ.464 கோடி ஒதுக்கீடு

அந்தியூா் தொகுதியின் வளா்ச்சித் திட்டங்களுக்கு நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பல்வேறு துறைகள் சாா்பில் ரூ.464 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முயற்சிகள் மேற்கொண்ட அந்தி... மேலும் பார்க்க

மைலம்பாடியில் ரூ.30.97 லட்சத்துக்கு எள் ஏலம்

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.30.97 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 274 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே குட்டைக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அம்மாபேட்டை அருகேயுள்ள கோணமூக்கனூா், இந்திரா நகரைச் சோ்ந்தவா் பிரகாஷ் மகன் பிரவேஷ் (12). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7... மேலும் பார்க்க