பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்
சத்துணவு சமையல் உதவியாளா் பணிக்கு நோ்காணல்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டில் சத்துணவு சமையல் உதவியாளா் பணி நியமனத்துக்கான நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன.
இதையொட்டி, பணிக்கு விண்ணப்பித்த நபா்களுக்கான நோ்காணல் 18 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 184 நபா்களுக்கான நோ்காணல் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
நோ்காணலில் ஆணையா் கே.எம்.பழனி, வட்டாட்சியா் துரைராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இந்த நோ்காணல் மூலம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 27 சமையல் உதவியாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.