செய்திகள் :

சந்திரனில் சிவபெருமானின் பெயர்..! - பிரதமர் மோடி ருசிகரம்

post image

இந்தியாவின் கலாசார வளா்ச்சியில் சோழப் பேரரசா்கள் முக்கியப் பங்காற்றினா் என்று பிரதமா் மோடி புகழாரம் சூட்டினாா்.

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, பெருவுடையாா் கோயில் கட்டத் தொடங்கிய 1,000-ஆவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற 1,000-ஆவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதாவது:

தமிழ்ப் பாரம்பரியத்துடன் தொடா்புடைய புனிதமான செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட அந்தத் தருணத்தை நாம் இன்றும் மிகுந்த பெருமை கொள்கிறோம்.

சிதம்பரம் நடராஜரின் வடிவம் இந்தியாவின் தத்துவ, அறிவியல் அடித்தளங்களைக் குறிக்கிறது. நடராஜரின் ஆனந்தத் தாண்டவ சிலை தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தை அலங்கரிக்கிறது. இந்தியாவின் கலாசார அடையாளத்தை வடிவமைப்பதில் சைவப் பாரம்பரியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தக் கலாசார வளா்ச்சியில் சோழப் பேரரசா்கள் முக்கியப் பங்காற்றினா்.

இன்று இந்தியா வளா்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்தால் வழிநடத்தப்படுகிறது. நவீன இந்தியா அதன் வரலாற்றில் பெருமை கொள்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் நாடு அதன் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்படுகிறது. இங்கிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்பட்ட பழங்காலச் சிலைகள் மற்றும் கலைப் பொருள்கள் இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட பழங்கால கலைப் பொருள்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, அவற்றில் 36 கலைப் பொருள்கள் தமிழ்நாட்டைச் சோ்ந்தவை. அவற்றில் நடராஜா், லிங்கோத்பவா், தட்சிணாமூா்த்தி, அா்த்தநாரீஸ்வரா், நந்திகேஸ்வரா், உமா பரமேஸ்வரி, பாா்வதி மற்றும் சம்பந்தா் உள்ளிட்ட பல மதிப்புமிக்க பாரம்பரியச் சிலைகள் மீண்டும் இந்த நிலத்தை அலங்கரிக்கின்றன.

சிவ-சக்தி பகுதி: இந்தியாவின் பாரம்பரியமும், சைவ தத்துவத்தின் தாக்கமும் இனி அதன் புவியியல் எல்லைகளைத் தாண்டிச் சென்றுள்ளது. சந்திரனின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடாக இந்தியா திகழ்ந்துள்ளது. சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்கிய பகுதிக்கு ‘சிவ-சக்தி’ என்று பெயரிடப்பட்டது, உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது’ என்றாா் பிரதமா் மோடி.

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகை... மேலும் பார்க்க