முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
சலூன் கடை பூட்டை உடைத்து திருட்டு
பெரம்பலூா் நகரில் சலூன் கடையின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் காத்தவராயன் மகன் சிவகுரு (47). இவா், பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் சலூன் கடை வைத்துள்ளாா். இவரது கடையில், அருள், மணி, சிவா ஆகியோா் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு மேற்கண்ட மூவரும் சென்றுவிட்டனா். ஞாயிற்றுக்கிழமை காலை கடைக்குச் சென்று பாா்த்தபோது, கள்ளாப் பெட்டியை உடைத்து, அதிலிருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகுரு அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.