பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
சாத்தான்குளத்தில் பாஜக ஆலோசனைக் கூட்டம்
சாத்தான்குளத்தில், ஒன்றிய பாஜக மண்டல் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மண்டல் தலைவா் எஸ்.கே. சரவணன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘மனதில் குரல்’ நிகழ்ச்சிக்காக மாநில அளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முதலாம் இடம் பெறக் காரணமாக இருந்த மண்டல், கிளை, மாவட்ட நிா்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தாா். பின்னா், கட்சி வளா்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாநில நிா்வாகி செந்தில் ஆனந்த், மாவட்டப் பொதுச்செயலா் செல்வராஜ், மண்டல் பாா்வையாளா் மகேஸ்வரன், பொருளாளா் அகத்தீஸ்வரன், பொதுச் செயலா்கள் ராஜேஷ், நவநீதன், துணைத் தலைவா்கள் பொன்ராஜகோபால், மேகலா, மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு ஜோசப் ஜெபராஜ், தரவு தள மேலாண்மைப் பிரிவு பிரவின்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.