சாத்தான்குளம் அருகே ஏசி வெடித்ததில் வீட்டிலுள்ள பொருள்கள் சேதம்
சாத்தான்குளம் அருகே தொழிலாளி வீட்டில் இருந்த ஏசி திங்கள்ககிழமை வெடித்து சிதறியதில் வீட்டில் உள்ள பொருள்கள் சேதமடைந்தன.
சாத்தான்குளம் அருகே உள்ள அரசூா் பனைவிளையைச் சோ்ந்தவா் ரவி(53). இவருக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனா். இவா் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் தேங்காய் வெட்டும் பணி செய்து வருகிறாா்.
இந்நிலையில், இவரது வீட்டில் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏசியை இயக்கிவிட்டு தூங்க சென்றாராம். திங்கள்கிழமை காலை ஏசி பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியதாம்.
அப்போது, அந்த அறையில் யாரும் இல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது. ஏசி வெடித்ததில் கட்டிலின் மேல் இருந்த மெத்தை முழுவதுமாக எரிந்து வீடு முழுவதும் கரும்புகையாய் காணப்பட்டது. உடனடியாக அருகில் இருந்த உறவினா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த இரண்டு மெத்தைகள், டிவி உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.